யாதுமாகாமல் போனவளே!....


உன்னுடன் இணைந்து நடக்கும் போது...
உன்னுடன் இணைந்து உணவருந்தும் போது...
உன்னுடன் இணைந்து தேநீர் அருந்தும் போது...
உன்னுடன் இணைந்து கடைதெரு செல்லும் போது...
உன்னுடன் இணைந்து பணிபுரியும் போது...
உன்னுடன் இணைந்து பயணிக்கும் போது...
உன்னுடைய கால் கொலுசு சிணுங்கும் போது...
உனது சின்ன சின்ன சில்மிசங்களை காணும் போதும்...
வரம்பு மீறாத வாய் சண்டைகளும் ...
எல்லை மீறாத சீண்டல்களும் - நீ
எனது காதலியாக வில்லையே
என்ற ஏக்கத்தை விட - நீ
எனது மனைவியாக வில்லையே
என்ற வருத்தம் தான் மேலோங்கி நிற்கிறது !....
வீ. இளவழுதி

ஆளும் திறன்....

எனக்குள் எல்லோரையும் போல வந்தாய்

எனக்கானவளாக மெள்ள மாறிப்போனாய் - நீ

என் காதலியாகவும் இருந்தது இல்லை - இன்று

என் வாழ்க்கை துணையாகவும் இல்லை - ஆயினும்

என்னை ஆட்சி செய்யும் லாவண்யத்தை

எங்கிருந்து கற்று வந்தாய் - கண்ணம்மா!......

- வீ. இளவழுதி

காதலை யாசிக்கிறேன்....

கல்லூரி வந்த புதிதில்

களங்கமில்லா மனிதர்கள் மத்தியில் - உன்

சிநேக புன்னகையில் சிநேகிதனானேன் ...

கிடைத்த தருணங்களில் ...

பரிமாறிக்கொண்ட தகவல்களில்...

ஒருவருக்குள் ஒருவர் ஒட்டிக்கொன்டோம்

ஏதோ ஒரு தருணத்தில்

ஏதோ ஒரு கணத்தில் ...

நீ எனக்குள் காதலியாக

எனக்கே தெரியாமல் மாறிப்போனாய்..

இத்தனை நாளாக சொல்லாத காதலை

கல்லூரியின் கடைசி நாளிலும்

சொல்லாமல் செல்லலாம் தான் -

ஆனால் பின்னாளில் ஒரு நாள் - நீ

என் முன்னால் வந்து

அன்றே சொல்லி இருந்தால்

உன்னை ஆராதித்திருப்பேனே

என சொன்னால் ....

தூண்டிலிட்ட புழுவாய்

துடித்தல்லவா போகுமென்மனம்

எனவே தான் உன்னை

தொலைத்து விடாமலிருக்க

உனக்குள்ளிருக்கும்

காதலையும் யாசிக்கிறேனடி !....

--வீ.இளவழுதி.

என் உள்ளுயிர்

பத்தோடு பதினொன்றல்ல - நான்

தனித்துவமானவன்

என்பதால் தானோ - உன்

புன்னகையை - எனக்கு

பொன்னகையாக்கி

புத்தொளி பெறச்செய்தாய்!...

பின் ஏனடி என்னை

பிரிந்து சென்று உள்ளுயிர்

பறித்து சென்றாய்!...

வழிப்போக்கனின் வார்த்தைகள்...

தமிழ் போல என்னுள்

தங்கிய என் வேதமே !.... நிவேதமே!...

தன்னை பற்றி மட்டுமே

தனிப்படுத்தி காட்ட முயலும் - உலகில்

தாயைப்போல மற்றவர்களும்

தழைத்து வாழ வேண்டுமென

தவமிருப்பவளே!....

சோகங்கள் இங்கு பல உண்டு - ஆறுதல்

சொல்ல இயலாதவையும் சில உண்டு

இன்று - நானும்

உனக்கு ஆறுதல் சொல்ல

இயலாதவனாகவே உள்ளேன்!...

ஆயிரமாயிரம் பேர்

வார்த்தைகளில் ஜாலம் கோர்த்து

உன்னிடம் கொட்டி விட்டு சென்றாலும்

உன்னின் உண்மையான நேசம் மட்டும் - நீ

தோள் சாய்ந்து இளைப்பாற - உன்னை

அரவணைத்து தூக்கி விடும் -

அந்த தோழமையில் - நீ

அனைத்தையும் மறக்க வேண்டும்

புதிதாய் பிறந்ததாய் - எண்ணி;

சாதனைகள் நீ படைத்திட வேண்டும்

சரித்திரம் உன்னை பார்த்திட வேண்டும்

வார்த்தைகளை கோர்த்து உனக்கு

ஆறுதல் சொல்வதை விட

என் தோள் சாய்த்து அரவணைத்து

அழைத்து செல்லும் நட்பாக

இருக்க விரும்புவதால் சொல்கிறேன்

கவலை - நீ மறந்து ;

கணினியில் கரை கண்டிட

காலம் உன்னை போற்றிட

புதிய அத்தியாயம் - நீ படைத்திட

ஆறுதல் சொல்ல வந்த

வழிப்போக்கன் வாழ்த்துகிறேன்!...

- வீ. இளவழுதி

உன் உதட்டோர புன்னகை...

உன் மீது நான் கொண்ட காதல்

உணர்வுகளால் மட்டுமே!

காலம் நம் கனவுகளை

கலைத்தாலும் - என்

காதல் மட்டும்

கலையாது கண்மணி !...

எனக்காக எதையும் செய்வேன்

என்றவளே... என்னவளே !...

எதிர்வரும் காலங்களில்

என் எதிர்படும் நேரங்களில்

என் இதயம் மீண்டும் துடித்திட

என் உயிர் வாங்கிய

உன் உதட்டோர புன்னகையை தா!...

அது போதும் - எனக்கு

இன்னும் ஒரு ஜென்மம் வாழ்ந்திட !....

பிரிவு....

எனக்காகவே வளர்ந்தவள் போல
என்னை ஒட்டிய உன் உயரம்
அமைதியாக அலைபாயும் உன்
காந்த கண்கள் !....
நெற்றியின் மத்தியில்
அழகுக்கு அழகு சேர்க்க
அழகாக அமைந்த திருநீறு!...
செதுக்கி வைத்தார்ப்போன்ற
உன் நாசி!..
ரவிவர்மனின் தூரிகையில்
படைக்கபட்டதோ என
வியப்படைய வைக்கும்
உன் உதடுகள் !...
பள்ளாங்குழியினை
ஞாபகப்படுத்தும்
உன் கன்னக்குழி!...
என மொத்தமாக
என்னை கவர்ந்தவளே!...
உன்னுடன் வாழும்
வரம் வேண்டி...
ஒவ்வொரு நொடியும் - நான்
தவமிருக்க....
பந்தங்களின் பாசத்துக்காக
பாவியிவனை
பாதி வழியில்
பரிதவிக்க விட்டு விட்டு
சென்றதேன் கண்ணம்மா?
- வீ, இளவழுதி

என் புதினமே!

ஓரிரண்டு வருடம்
ஒளிந்து விளையாடி
ஒரு வழியாக
உன்னை சந்தித்தேன் -
ஒரு நாள்!...
அயல் தேச பயணம் செல்வதாக
அவசர கதியில் விடை பெற்று
உன் நினைவுகளை தந்து
என் நிஜத்தை எடுத்து சென்றாய்!...
மீண்டும் - உன்
தரிசனம் காண தவமிருந்தேன்
ஆறிரண்டு மாதம்;
நித்தம் நித்தம்
நாள்காட்டி முன்
நாழிரண்டு நாளிகை
நான் நின்று
ஒரு வழியாக
ஒரு வருடம் கடந்து - நீ
வரும் நாள் வர - உன்
முகம் -
நான் கண்டிட ....
வசந்தமே - நீ
வரும் வாசல்
வந்து காத்திருக்க
வழக்கம் போல
விதி சதி செய்து - உன்
தரிசனம் பெரும்
பாக்கியத்தை தடுத்தது !....
நாள் முழுக்க உன்னுடன் பேசிய
தொலைபேசியில் உன்
குரலாவது கேட்குமா - என
என் உள்மன உந்துதலில்
உறங்கும் நேரம் கூட
காத்திருக்கிறேன்...
தங்கமே! தாமரையே!...
என் புதினமே! புவனமே!
புதிராய் - நீ
மாறிப்போனதேனடி!....
--வீ. இளவழுதி

இப்பிறவியின் பயன்......

இதயம் முழுதும் நிரம்பி - கனவுகளில்
நம் வாழ்கைக்கான களம் அமைத்தவளே!.....
ஒரு முறை உந்தன் குரல் கேட்டால்
உயிருடன் வாழும் அர்த்தம் அறிவேனடி!....
ஒரு முறை உந்தன் திருமுகம் பார்த்தால்
இப்பிறவியின் பயன் அடைவேனடி!....
-- வீ. இளவழுதி

என் வாழ்வாக வந்தவளே....

என் இரண்டாம் பணியின்
முதல் தோழியானவளே - உன்
உயிர் வாங்கிய புன்னகையில் - நீ
என் வாழ்வில் முதன்மையானவளானாய்.....

உருண்டோடிய நாட்களில் - உன்
உண்மையான அன்பில் - உயிர்
கசிந்து உன் சிநேகிதனானேன்.....

என் வழிகாட்டுதலில்
வளம் காணுவதாக நீ
கூறிய நொடிகளில் - என்
வாழ்வில் மெல்ல மெல்ல
வசந்தங்களை கொண்டு வந்து
வாசம் செய்ய துவங்கினாய்.....

உனக்காக நான் செதுக்கிய
கவிதைகளை - நீ
படித்த நொடிகளில் ....
சிவந்த உன் கன்னங்கள்
மேலும் நாணத்தில் சிவக்க...
உன்னருகில் நானிருந்து உன்
வெட்கத்தை ரசித்த நொடியில் - நீ
என் காதலியாக மாறிப்போனாய்.....

உன்னோடு நான் சென்ற
இடங்கள் எல்லாம் - உன்
வருகையால் மேலும்
அழகானதை - என்
கண்ணில் நீ
கண்ட காட்சியில் - என்
வாழ்வாக வாசம்
செய்ய துவங்கினாய் .....

அலுவலக நேரங்களில்
அலுவல் இல்லா நேரங்களில்
என்னருகில் நீயோ - இல்லை
உன்னருகில் நானோ ....
நமக்கான வாழ்வைப்பற்றி
மட்டுமின்றி வரம்பின்றி
நாம் விவாதித்த விசயங்கள்....

என்னைப்பற்றி உன் வீட்டாரும்
உன்னைப்பற்றி என் உறவுகளும்
உயர்வாய் மதித்த தருணங்கள்
என
இப்படியாக நம்மைப்பற்றி
சொல்ல ஓராயிரம் இருக்க....

காலதேவனின் இரக்கமற்ற.......
உறவுகளின் இதயமற்ற........
மனதிற்க்கு ஒப்பாத
காரணம் சொல்லி - நம்
கனவு வாழ்வை
மெய்ப்பட செய்யாத
சொந்தங்களும் பந்தங்களும்
நம்மை பிரித்த சந்தோசத்தில்
திலைக்க.....

எறும்புக்கு கூட தீங்கிழைக்காத - நீயும்
எவர் மனதும் புண்படாது வாழும் - நானும்

நமது காதலின் வெற்றியை
மற்றவர்களின்
சந்தோசத்துக்காக சமர்ப்பித்து
காலத்தை வெல்ல இயலாமல்
கரை ஒதுங்கிணோம்
இரு வேறு திசைகளில்
இருவரும்.........
-- வீ இளவழுதி





இப்பிறவி....

என் எண்ணங்களின்

விதையாக விளைந்தவளே!...

என் கற்பனைகளின்

உயிர் சிலையாக வளர்ந்தவளே!....

உன்னைப் படைத்ததால்

பிரம்மன் எனக்குள்

உன்னைப் பற்றிய

சிந்தனைகளை வைத்தானா?...

இல்லை என் உயிர்க்கனவிற்கு

உருவம் தர

உன்னைப் படைத்தானா?....

புரியவில்லை - ஆயினும்....

உன்னைப் பார்த்ததாலே

இப்பிறவியின் உண்மை உணர்ந்தேனடி !.....

--வீ.இளவழுதி

உயிர்த்தெழுகிறேன்....

வான் அலைகளில்
மட்டுமே உன் சிரிப்பொலி
உணர்ந்தவன்....
முதல்முறை நேரில்
பார்த்தபோது....
மொட்டுகளில் இருந்து
மெல்ல.... மெல்ல....
விரியும் மலர்களின்
இதழ்களை போல - உன்
இதழ்களின் வழி - நீ
சிந்திய மெல்லிய புன்னகையில்
மெல்ல... மெல்ல....
உயிர்த்தெழுகிறேன்
என்னில் நான் மீண்டுமொரு முறை.....
--வீ. இளவழுதி, பின்னையூர்.

சின்ன ஆசை....

உன்னை என் மடி மீது சுமத்தி -
உன் மன கஷ்டங்களுக்கு மருந்திட்டு
மீண்டும் நீ மண்ணில் மகிழ்வுடன்
பவனி வரும் நொடி -
நான் கானவேண்டும்......

ஆறுதல் தேடும் உன்னருகில்
ஆல மரம் போலிருந்து
அனுதினமும் உன் வளர்ச்சிக்கு
ஊன்றுகோலாக -
நான் இருந்திட வேண்டும்.....

உலகத்து இன்பங்கள் அனைத்தும்
உன் ஒருத்திக்கே என தேடி பிடித்து
உன் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்
அந்த நொடியில் உன் முகத்தில் எழும்
சின்ன..... சின்ன.... சந்தோசத்தை
நான் கான வேண்டும்....

என்னருகில் நீ இருந்தால்
எல்லையற்ற சந்தோசம்
என உணரும்படி - உன்னை
நான் காத்திட வேண்டும் ....

இறுதியில்....
என் மனம் முழுதும்
இன்பங்கள் நிரம்பி - உன்
மடியில் தலை வைத்து
என் உயிர் பிரிய வேண்டும் .....
-- வீ.இளவழுதி

சமர்ப்பணம்

நான் துவண்டு
விழுந்த நேரங்களில்
என் தோள் தூக்கி;
தன் தோள் சாய்த்து;
என்னை வாழ்வின் பாதைக்கு
மீண்டு(ம்) வரச்செய்து..
வாழ வைத்த -
வாழ வைக்கும்;
என் உயிரினும் மேலான
என் நண்பர்கள்...
கார்த்தி சோழகர்,
ராஜா மழவராயர் மற்றும்
ராமமூர்த்தி தேவர்
ஆகியோருக்கு
இந்த வலை பக்கத்தை
சமர்ப்பிக்கிறேன்.....
-- வீ. இளவழுதி காளிங்கிராயர்

ரயில் பயணத்தில்

ஒரு தொலைதூர ரயில் பயணத்தில்....
சன்னலோர இருக்கையில் அமர்ந்து -
சலனமில்லா என் மனம் இயற்கையை
ரசித்து வருகையில்..... இடையில்
ஏதோ ஒரு சலனம் - என
சற்றே தலைதிருப்ப
தொட்டுவிடும் தூரத்தில் - என்
எதிரில் அமர்ந்திருந்தாய்...
என் வாழ்வே இயற்கையைபோல
இங்கிருக்க எதைதேடி
இத்தனை நாளாய் அலைந்தேன் - என

என்னுள் இறுமாப்பு கொண்டு
எனக்கு கிடைத்த வாய்ப்பில்
என் காதலை உன்னிடம் சொல்ல...
என்ன காரணத்தாலோ
உன் கண்ணிலிருந்த காதலை
கடைசி வரை என்னிடம் சொல்லாமலே
சென்றதேன் கண்மணி.....
--வீ.இளவழுதி

வரம் தருவாயா அண்ணா...

உணர்வுகளால் உன்னை நெருங்கி
உயிராய் உன்னை ஒரு முறை
பார்க்க ஆசை
உடன் பிறந்தவனே வருவாயா ....
வரம் தருவாயா ....

அண்ணா...

சோகங்களே உன்
நிகழ்கால வாழ்வானாலும்
சாதனைகளே உன்
கற்பனையில் ஊறி
வாழ்வை வென்றாய்;
சாவை மட்டும் ஏன்
சாகடிக்க மறந்தாய்?
என் அண்ணா....

முதல் பார்வை

நானாக இருப்பேனோ
என்றும் தெரியாமல் ;
நான் தானா
என்றும் புரியாமல் ;
உன் வாழ்வில்
மறக்க இயலா
மங்கள நாளில்…
மலங்க மலங்க
முழித்து - நீ
பார்த்த அந்த - ஒரு
பார்வையை என்
வாழ்நாள் முழுக்க
மறக்க இயலாது தோழி.....

முதல் தரிசனம்....

மூன்றாண்டுகள் என் குரல்
மட்டும் கேட்டவள் - இன்று
முதல் முறையாக - என்
முழு உருவ தரிசனம் காண்கிறாள்;
முழுதாய் ஒரு வார்த்தை
பேச இயலாமல் ...

என் பயணங்கள்....

நெஞ்சமெல்லாம் உன்னை பற்றிய
எதிர்பார்ப்புகளும்.....
சிந்தனை எல்லாம் உன்
நினைவுகளுமாக....
தொடர்கிறது என் பயணங்கள்....
--வீ. இளவழுதி

உன்னால்.....

உலகத்தில் தனக்கான மலையை
பழனியில் கண்டுபிடித்தார் முருக பெருமான்;
காணாமல் போன தனது ஆட்டை
ஆயிரமாயிரம் ஆடுகளுக்கு மத்தியில்
கண்டுபிடித்தார் ஏசு பெருமான்;
லட்சத்தி லட்சம் பெண்களில்
உன்னை மட்டும் கண்டு பிடித்தேன் - நான்;
இந்த வகையில் நானும் அவர்களுக்கு
சமமாகிறேன் - உன்னால் .....

இந்த ஒரு நொடிக்காக...

கண் மூடிபடுத்தால்
உறக்கம் வரவில்லை;
உறக்கம் வந்தாலும்
கனவு வருவதில்லை;
கனவு வரும்போதிலும் – அதில்
கண்மணி நீ வருவதில்லை – என
மன உளைச்சலில் மருகி;
அதிகாலையில் உறங்கி ;
தாமதமாய் எழுந்து;
அவசரகதியில் இயங்கி;
நெருசலில் சிக்கி;
வியர்வையில் நனைந்து;
மனம் வெறுத்து
அலுவலகம் நுழைகையில்
அருகினில் உன் தரிசனம்;
எல்லாம் மறந்து
ஒரு நிமிடம்
மனம் லேசாகிறது
புதிதாய் பிறந்ததாய்
என்னி மனம் கூதுகளிக்கிறது...
இந்த ஒரு நொடிக்காக...
இது போல ஓராயிரம்
இன்னல்களை கடந்து வரலாம்....
-- வீ. இளவழுதி

தேவதையின் தரிசனம்...

காற்றில் உந்தன்
குரல் கேட்டு
கற்பனையில் உயிர்
வளர்த்து - உன்னை
காணும் தருணத்திற்காக
வரம் வேண்டி...
இறைவன் சன்னதியில்
காத்திருக்க.....
வரம் தரும் அம்மனாக
வந்தாய் என்னருகில்...
வார்த்தைகளில் வர்ணம்பூசி
வரவழைத்தவன்- உன்னை
கண்ட தருணத்தில்
வாயடைத்து நிற்கிறேன்- பேச
வார்த்தைகளின்றி!....
-வீ. இளவழுதி, பின்னையூர்

முதல் கவிதை..

என்னின் முதல் கவிதை
உன்னின் கோபத்தி(தீயி)ல்
கருகிய போதும்
என்னிலிருந்து
கவிதைகள் பல பல
காற்றினிலே கலந்து
வருகின்றன – வசந்தமே
வாசிக்க நீயின்றி...

-- வீ.இளவழுதி

பூண்டி ஐயா...


ஏர் பிடித்த
எங்களின் வாழ்வை...
ஏற்றமிகு
கல்வியால் வளம்
கான செய்த
வள்ளலே!... - எங்கள்
கல்வி காவலரே!...
கல்வியை கொடையாய்
தருவதில் கடையேழு
வள்ளலையும் மிஞ்சியவரே!....
உங்கள் வழி காட்டுதலில்
வளம் காணுவதில்
பெருமையடைகிறோம்....
--வீ.இளவழுதி, பின்னையூர்

சாரல்....


கண்களுக்கு காவியம் நீ...
செவிகளுக்கு இன்னிசை நீ ...
நாவிற்கு அறுசுவை நீ ...
மார்கழியின் மறுவடிவம் நீ...
சித்திரையின் எதிர்பதம் நீ...
இயற்கையின் வரம் நீ...
எங்களின் தவம் நீ...
மலைகளின் கூந்தல் நீ...
மனைவியை மறக்கச்செய்பவலும் நீ ...
மழையின் மகத்துவம் நீ ...
அருவியின் அற்புதம் நீ...
சாரலின் அழகு ....
மலையிலா? .. அருவியிலா?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
சாரலே...
நீ தான் அழகு....
--வீ.இளவழுதி

கரம் பிடிப்பேன் கண்மணி...


ஊரே எதிர்த்தாலும்...
உன்னை தர மறுத்தாலும்...
உன் மனதில் நானிருந்தால் ..
உன்னை கரம் பிடிப்பவன்
நானாகவே இருப்பேன் கண்மணி...
--வீ.இளவழுதி

என்றென்றும் காத்திருக்கும் ....

என் நினைவே
உன்னை தீண்டாவிடிலும்
உன்
இதயத்தின் ஓரத்தில்
உன்னையும் அறியாமல்
ஒட்டியிருக்கும் -
என் பிம்பம்
என்றாவது கஷ்டப்படும்
நொடியில் நீ
தோள் சாய்ந்து இளைப்பாற
என்றென்றும் காத்திருக்கும் ....
--வீ.இளவழுதி

அப்பா...



மொழிப்போர் தியாகி
உ. வீரராசன் காளிங்கராயர்

ஈடில்லை ...
இணையில்லை ...
உங்கள் நினைவுகளின்றி,
இறுதி வரை
துணையில்லை....
--வீ. இளவழுதி காளிங்கராயர்




கலைந்து போன கனவுகள்

உறவுகளின் உந்துதலால்
காலத்தின் கட்டாயத்தால் - நீ
என்
கரம் பிடிக்கும் நாழிகை
காற்றோடு கலந்து விட்டாலும்
காரிகையே ...
கடக்க இருக்கும் காலங்களில் - உன்
வாழ்வில் வசந்தங்கள் சேர்க்க
வண்ணத்து பூச்சியாக உன்
வாசல் வந்து சேர்ந்திடுவேன்
நீ ...
மகிழ்வின் எல்லை சென்றிட
உன் மகளோ மகனோ
நம் எண்ணங்களுக்கு
உருவம் தந்து உயர்ந்திட
ஒவ்வொரு கணமும் - என்
முருகனை பிரார்த்தித்துக்கொண்டிருப்பேன்
கண்மணி ...
--வீ. இளவழுதி

நமது வாழ்வு ...

உன்னின் ஒவ்வொரு
நொடியிலும் - உடனிருந்து
உனது வெற்றிகளுக்கெல்லாம்
ஊன்றுகோளாக இருந்து
உன்னை உற்சாகப்படுத்திடவேண்டும்

என்னவளின் திருக்கரங்களால்
எண்ணற்ற வெற்றி மாலைகள்
என் தோள்களை
அலங்கரிக்க வேண்டும்

இயற்கையின் அழகினை
இயன்றவரை உன்னுடன்
இருந்து இன்புற்று
ரசித்திட வேண்டும்

இப்படி எண்ணற்ற
ஆசைகளை என்னுள்
சுமந்து திரிகின்றேன்
என்னவளே
என்று நிஜமாகும்
நமது கனவுகள்....
-- வீ. இளவழுதி

பொறியாளர். வீ. இளங்கோவன்


அகர முதல
அறிந்தது உன்னால்...
ஆயுளின் பாதி
அனுபவமும் உன்னால் ...
என்னின் சாதனைகளும்
உன்னால் அமைந்திட,
ஆசிர்வதிப்பாயாக
அண்ணா!...

-- வீ.இளவழுதி

என்று வருவாய்...


புல்லின் மீது விழுந்த
பனி துளி போல
எனக்குள் விழுந்தவளே என்று
வருவாய் என் முன்னாள்?....
--வீ.இளவழுதி

வழித்துணை...


உன்னை பற்றிய என்
எண்ணங்களை உடைத்து
உன்னின் ஒவ்வொரு செயலிலும்
எனது எண்ணங்களுக்கு செயல்
வடிவம் தந்து வாழ்வின்
வழித்தடம் காட்டியவளே...
வழித்துணையாக நீ - என்
வாழ்வில் வருவது எப்போது?
--வீ.இளவழுதி

மீண்டுமொரு முறை

ஆயிரமாயிரம் மனிதர்கள்
பணிபுரியும் அலுவலகத்தில்...
யாருமற்ற தனிமையில்
ஒரு நாள்....
உன் அருகில்
ஒரு முழு நாள்...
உன்னுடன் பரிமாறிக்கொண்ட - அதே
தகவல்களை கூட
அலுக்காமல் மீண்டுமொரு முறை
அசை போட்ட நாள்...
ஒரே உணவினை உன்னுடனிருந்து
சுவைத்திட்ட நாள்...
ஊரைப்பற்றி கவலைப்பட்டு;
உன்னருகில் அமர அச்சப்பட்டு;
ஒரே பேருந்தில்
ஒரு சேர பயணித்த நாள்...
கவலைப்பட்ட ஊரைப்பற்றி
கவலை இன்றி - உன்னுடன்
நடந்து சென்ற வீதிகள்... கடைகள்....
ஒரு வருடமாக தவமிருந்த
இந்த திருநாள்
மீண்டுமொருமுறை வாய்த்திடாதா?...
--வீ.இளவழுதி

என்னவளே...

அமைதியின் மறு உருவாய்
அலைபாயும் உன் கண்கள் ...
தனிமையுடன் தாலாட்டு பாடும்
உனது குணம் ...
மெலிதான சோகம் இழையோடும்
உன் முகம் ...
அதிர்ந்து விழாமல் வந்துவிழும்
ஒரு சில வார்த்தைகள்...
எளிமையின் வெளிப்பாடான
உனது அலங்காரம் ...
இப்படியாக என்னை
மொத்தமாக ஈர்தவளே...
என்னுடன் உன் வாழ்வை
பரிமாறிக்கொள்ளும் நாள்
என்று அமையும் கண்மணி ...
---வீ.இளவழுதி காளிங்கராயர்

காதலை யாசிக்கின்றேன்...

கல்லூரி வந்த புதிதில்
களங்கமில்லா மனிதர்கள் மத்தியில் - உன்
சிநேக புன்னகையில் சிநேகிதனானேன் ...
கிடைத்த தருணங்களில் ...
பரிமாறிக்கொண்ட தகவல்களில்...
ஒருவருக்குள் ஒருவர் ஒட்டிக்கொன்டோம்
ஏதோ ஒரு தருணத்தில்
ஏதோ ஒரு கணத்தில் ...
நீ எனக்குள் காதலியாக
எனக்கே தெரியாமல் மாறிப்போனாய்..
இத்தனை நாளாக சொல்லாத
காதலை கல்லூரியின்
கடைசி நாளிலும் சொல்லாமல்
செல்லலாம் தான் - ஆனால்
பின்னாளில் ஒரு நாள் - நீ
என் முன்னால் வந்து
அன்றே சொல்லி இருந்தால்
உன்னை ஆராதித்திருப்பேனே
என சொன்னால் ....
தூண்டிலிட்ட புழுவாய்
துடித்தல்லவா போகுமென்மனம்
எனவே தான்
உன்னை தொலைத்து விடாமலிருக்க
உனக்குளிருக்கும் காதலையும் யாசிக்கிறேனடி !....
--வீ.இளவழுதி.



அன்னிய தேசத்தில் நீ....


கவலைகளை மறந்து கண்மூடி
உறங்கும் நேரம் ....
பகலின் மற்றொரு முகமாம்
இரவினை ரசிக்கும் நேரம்...
நிலவின் தரிசனம்
காணும் நேரம்....
மலரின் அழகை வேறு
பரிணாமத்தில் பார்க்கும் நேரம்....
பறவைகளின் இசைக்கச்சேரி
கேட்கும் நேரம்...
அம்மாவின் தாலாட்டில்
குழந்தை உறங்கும் நேரம்....
இளையராஜாவின் இன்னிசையில்
கண்ணயரும் நேரம்...
ஐம்புலனுக்கும் சற்றே
ஓய்வழிக்கும் நேரம்...
ஆனால்
ஏனோ இவை எல்லாம் - என்
நினைவுக்கு வரவில்லை - உன்
குரல் கேட்கும் நேரம்
இது என்பதால்....
--வீ.இளவழுதி

நினைவுகள்...

உயிர் இன்றி
உணர்வுகள் இல்லை .....
உன் நினைவுகளின்றி
நான் இல்லை ....
--வீ.இளவழுதி

என் வாழ்வே....

என் எண்ணங்களில் நீ!
என் எழுத்துக்களில் நீ!
என் சிந்தனையில் நீ!
என் கனவினிலும் நீ!
என் கவிதையும் நீ!
என் வசந்தமும் நீ!
என் வாழ்வாய்
வருவாய் நீ!....
-வீ.இளவழுதி

என்னை ஆக்கிரமித்தவளே ...


மெல்ல மெல்ல
உன் நினைவுகளால்
என்னை ஆக்கிரமித்தவளே ...
என்று என்னை முழுதாய்
அரவணைப்பாய்? .......
--வீ. இளவழுதி, பின்னையூர்

விதியின் தவறா?

தாய்மையை என்னிடம் - நீ
உணர்ந்து கொள்ள...
தாரமாய் நான் - உன்னை
நினைத்துக்கொள்ள
தடுமாறியது என் தவறா?
தடுமாற வைத்த
விதியின் தவறா?
-- வீ.இளவழுதி

பாசம்...

புரியாத பாசம்
பிரியும் போது
புரியும்....
எங்கோ கேட்டது
உன்னிடம் உணர்ந்தது.....
--வீ.இளவழுதி

உன் நினைவுகள்...




உனது ஒரு பார்வை கூட
என்னை தீண்டியதில்லை ஆயினும்
உன் நினைவுகளில் மட்டுமே கழிகின்றது
என்னின் ஒவ்வொரு பொழுதும்....
-- வீ. இளவழுதி காளிங்கராயர்





யாசிக்கிறேனடி....

உனக்கு பிடிக்காது என்பதால்
நான் இழந்தவைகளும்....
எனக்கு பிடிக்கும் என்பதால் - நீ
கற்றுகொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...
நமக்கான வாழ்வின் பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது....
எனக்கான உன் தவிப்பும்
உனக்கான என் அக்கறையும்
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...
உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்னும் வாழவைக்கிறது...
இப்படியான நம் காதலில்
நமக்கான குழந்தை
நம் காதலை அர்த்தமுள்ளதாக்கியது...
இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது என் உயிர் பிரியும்
வரம் வேண்டி நம் காதலிடம் யாசிக்கிறேன்.....
--- இளவழுதி வீரராசன்

ஈர்ப்பு விசை....


புவி ஈர்ப்பு விசை
படித்ததுண்டு....
விழி ஈர்ப்பு விசை
பார்த்ததுண்டு...
உன் ஈர்ப்பு விசை
இன்று தானடி கண்டேன்....
--வீ. இளவழுதி.