(பழைய தஞ்சை மாவட்டத்துக்கு கல்வியை இன்றும் இலவசமாய் தரும் எங்கள் கல்வி தந்தை பூண்டி அய்யா (தாளாளர், பூண்டி திரு புஷ்பம் கல்லூரி))
எளிமையின் திருஉருவே!..
எங்களின் குருவே!..
கற்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு - ஆனால்
உம்மால் வளர்ந்ததே
எம் சிறப்பு!...
காந்தி நம் தேசப்பிதா
எங்களின் குருவே!..
கற்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு - ஆனால்
உம்மால் வளர்ந்ததே
எம் சிறப்பு!...
காந்தி நம் தேசப்பிதா
நீங்கள் எங்களின் பிதா!...
கதர்சட்டைக்கு ஒரு
மரியாதை உண்டு
கதர்சட்டைக்கு ஒரு
மரியாதை உண்டு
ஆனால் - நீங்கள்
அணிந்ததால் அது
காவியமாகிறது!..
உங்கள் பேச்சாற்றல்
எங்களை சிந்தனைவாதியாக்கியது!..
உங்களின் வாழ்வுமுறை
எம்மை சாதிக்கதூண்டியது!...
எவ்வளவோ எமக்கு
கற்றுதந்தீர்...
இவ்வளவும் உம்மிடம்
பயின்ற பின்பு
நாங்கள்
தலைநிமிரா விட்டால்
தவறில்லையா அய்யா?...
உங்கள் மாணவர்கள்
நாங்கள் - தலைநிமிர்ந்தே
நடப்போம் - உம்மின்
ஆசியோடும்...
வழிகாட்டுதலோடும்....