பூண்டி அய்யா


(பழைய தஞ்சை மாவட்டத்துக்கு கல்வியை இன்றும் இலவசமாய் தரும் எங்கள் கல்வி தந்தை பூண்டி அய்யா  (தாளாளர், பூண்டி திரு புஷ்பம் கல்லூரி))


எளிமையின் திருஉருவே!..
எங்களின் குருவே!..
கற்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு - ஆனால்
உம்மால் வளர்ந்ததே
எம் சிறப்பு!...
காந்தி நம் தேசப்பிதா
நீங்கள் எங்களின் பிதா!...
கதர்சட்டைக்கு ஒரு
மரியாதை உண்டு
ஆனால் - நீங்கள்
அணிந்ததால் அது
காவியமாகிறது!..
உங்கள் பேச்சாற்றல்
எங்களை சிந்தனைவாதியாக்கியது!..
உங்களின் வாழ்வுமுறை
எம்மை சாதிக்கதூண்டியது!...
எவ்வளவோ எமக்கு
கற்றுதந்தீர்...
இவ்வளவும் உம்மிடம்
பயின்ற பின்பு
நாங்கள்
தலைநிமிரா விட்டால்
தவறில்லையா அய்யா?...
உங்கள் மாணவர்கள்
நாங்கள் - தலைநிமிர்ந்தே
நடப்போம் - உம்மின்
ஆசியோடும்...
வழிகாட்டுதலோடும்....

நான் பிறந்த மண்...

காலை பனியில் கால்தடம் பதித்து

கவலையின்றி வயல்வரப்புகளில்

நெல்மனமும் மண்மணமும் நுகர்ந்து

நெருங்கிய தோழனோடு பகிர்ந்துண்டு

பள்ளி சென்ற காலங்களும் - விடுமுறையின்

பாதிபொழுதை குளத்திலும் மீதி நேரத்தை

விளையாட்டுமாய் வாழ்ந்த நாம்

வீரம்விளைந்த மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா..?

அதனால் தான்

உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு...,

உள்ளத்தில் ஒரு மகிழ்வு...,

என் மண்ணை நினைத்ததும்!


(இக்கவிதைக்கான விதையை தந்த மலர்விழி அக்காவுக்கு நன்றி)

இலக்கு

எவ்வளவோ முயற்சித்தும்
எட்டிப்பிடிக்க இயலாத
நிலவாகவே உள்ளாயே!....
என்ன செய்து
உன்னை அடைவேன்
என் கண்ணம்மா?....

வெற்றிடம்...

என் கனவுகளின் தேவதையே!..
உன்னால் ஏற்ப்பட்ட வெற்றிடம்
ஒரு கோடி பேரின் ஒட்டுமொத்த
அன்பால் கூட நிரப்ப முடியாதடி!...