மீண்டுமொரு முறை

ஆயிரமாயிரம் மனிதர்கள்
பணிபுரியும் அலுவலகத்தில்...
யாருமற்ற தனிமையில்
ஒரு நாள்....
உன் அருகில்
ஒரு முழு நாள்...
உன்னுடன் பரிமாறிக்கொண்ட - அதே
தகவல்களை கூட
அலுக்காமல் மீண்டுமொரு முறை
அசை போட்ட நாள்...
ஒரே உணவினை உன்னுடனிருந்து
சுவைத்திட்ட நாள்...
ஊரைப்பற்றி கவலைப்பட்டு;
உன்னருகில் அமர அச்சப்பட்டு;
ஒரே பேருந்தில்
ஒரு சேர பயணித்த நாள்...
கவலைப்பட்ட ஊரைப்பற்றி
கவலை இன்றி - உன்னுடன்
நடந்து சென்ற வீதிகள்... கடைகள்....
ஒரு வருடமாக தவமிருந்த
இந்த திருநாள்
மீண்டுமொருமுறை வாய்த்திடாதா?...
--வீ.இளவழுதி

No comments: