நிராகரிப்பு..

ஒரு முறை உன்னுடன்
      உரையாடிட மாட்டேனா என
ஒவ்வொரு நாளும் தவித்து
      உறக்கம் மறந்திருந்தேன் - உயிரே!...

ஒரு முறை உந்தன்
      திருமுகம் கண்டிட மாட்டேனா என
ஒவ்வொரு கணமும் நான்
      தீயாக உருகியிருந்தேன் - அன்பே!...

நேசங்களை சுவாசித்தவளே  - உன்னையே
       சுவாசமாக சுவாசித்தவனை - உன்
நேச கரங்கொண்டு அரவணைக்காமல் 
       சுடும் மண்ணில் நிற்ப்பது போல
நெஞ்சம் வலிக்க என்னை
       நிராகரித்தது ஏனடி - கண்ணே!...