பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
பிரிவு..
அழும் குழந்தை கூட
அழகாய் சிரிக்கும்;
உன் உதட்டோர
உயிர் புன்னைகையால்...
கருணை நிரந்த
காந்த கன்னழகியே...
புதிதாய் பூத்த பூப்போல
புத்துணர்ச்சியுடன் எப்போதும்
வலம் வர தெரிந்தவளே!...
வாழும் நாள் வரை
வலிதரும் பிரிவு தந்ததேனடி?
வேறுபாடு..
உன்னை சிந்திக்கும் தருணங்களில்
உச்சம் தொடுகிறேன் - சாதனைகளால்!...
உன்னை சந்திக்கும் நேரங்களில்
அச்சம் அடைகிறேன் - சோதனைகளால்!...
வலி..
நெருங்கி வரும்
ஒவ்வொரு வேளையிலும்
நெருஞ்சி முள்ளால்
நெஞ்சினில் குத்தும்
வலி தந்து
விலகுவதேனடி கண்ணே!...
எம் தலைவா!...
உலகில் அதர்மம்
தலையெடுக்கும் போது
கடவுள் அவதரிப்பார்
என்கிறது இதிகாசங்கள்
இது உண்மையா என
தெரியாது - ஆனால்
தமிழர்கள் தாக்கப்பட்டாலும்
தன்மானம் கேள்வியாக்கப்பட்டலும்
நீ அவதரிப்பாய்
என்பது உண்மை
எம் தலைவா!...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)