உயிரானவளே...

கதிரவன் முகம் காட்டும்
காலை பொழுதில்... கண்ணே!...
காற்றினில் அலைபாயும் - உன்
கார்மேக கூந்தலுடன்...
ஒத்தை உதட்டு சுழியில் - என்
ஆண்மையை அசைத்து விடும்
ஆழப்பார்வையால் என்
உயிர் வாங்கியதேனடி?...

அறியா காரணம்

மாலை வெயிலின்
மங்கிய வெளிச்சத்தில்
மஞ்சள் நிறத்தவளே! - உன்
கொஞ்சும் புன்னகையில்!.. - என்னை
கொள்ளை கொண்டவளே!...
அர்ச்சுனனின் வில்லை ஞாபகப்படுத்தும்
உதட்டினை உடையவளே!...
உன் மனதை போன்ற
வெள்ளை முத்தரிசி பற்கள்!..
அடர்ந்த புருவங்கள்
அந்த காந்த கண்கள்
பீன்ஸ் விரல்கள்
அறைநிலவாய் நகங்கள்
அமைதியான அர்த்தமான
ஆர்ப்பட்டமில்லா அன்பு வார்த்தைகளை
வெளிப்படுத்தும் குணம்
இன்னும் இன்னும்
உன்னிடம் நான்
கட்டுண்டதற்க்கான
காரணம்.. ஏராளம்
ஆனால்
காரணம் ஒன்று சொல்லடி
என் கண்ணே
என் காதலை உதறியதற்க்கு!