காற்றாய் நீ!...

காற்றை போலனவளா நீ - என்னால்
காற்றையும் பிடிக்க இயல வில்லை
உன்னையும் பிடிக்க இயல வில்லையே!..

கனவுகளில் நீ!...

உன்னோடு வாழும் வாழ்க்கை
கனவுகளில் மட்டும் தான் என்றால்
பகலே எனக்கு வேண்டாமடி...

இதயம் தொட்டவள்...

அதிராமல் வெளிப்படும் உன்
அன்பு வார்த்தைகளும்
கனிவான உன்
கருணை பார்வையும்
ஆப்பிள் கன்னமும்
அழகாய் அமைந்த
குடைமிளகாய் மூக்கும்
குண்டு கண்களும்
சின்ன உதடுகளில்
மெல்ல வழிந்தோடும்
உன் சிரிப்பும் - என்
சிந்தனைகளை சிதறடிக்கவில்லை!..
மாறாக
ஆயிரமாயிரம் கொளுசுகளில் - உன்
ஒத்தை கொளுசொலி - என்
உயிர் வாங்கி...
இதயத்தின்
அடி தொட்ட நாளில்...
அடியேன் உன்னிடம் - என்
ஆயுளை ஒப்படைத்தேனடி

கூந்தல்...

கருமேக கூட்டம் போன்ற
கடல் அலையை ஞாபகபடுத்தும் - உன்
கருநிற கூந்தலை காணும்போதெல்லாம்
களிப்புற்று இருந்தேன்!... ஏனோ
காளையிவனின் உள்ளமறியாமல்
காலத்தின் மேல் பழிசுமத்தி - என்
காதலை உதறி தள்ளியது போல - உன்
காற்றாட்டு கூந்தலை
கால் அளவுக்கு நறுக்கியதேனடி!..

காலத்தால் மாற்றமுடியாதது

உன்னோடு வாழ்தல்
இயலாத போதும்
உன்னோடு கனவுகளில்
களம் அமைத்து
உரையாடுவதும் உறவாடுவதும்
காலத்தால் மாற்றமுடியாததடி!...