உன்னோடு பேசுவது ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயுள் வாழ்ந்தது போன்ற நிம்மதி தந்தவளே
ஒரேயடியாக என்னை வஞ்சித்து என் காதலை
உன்னோடு எடுத்து சென்றவளே !... -பத்திரமாக பார்த்துகொள்
உன்னோடு வரும் என் காதலை மட்டுமாவது !...
அவசரத்தில் அள்ளி நான் அணைக்க
அச்சத்தில் நீ தவிக்க!.. - உன்
முந்தானை என் தோளில் துண்டு ஆக
முத்தங்களால் நாம் எச்சமானோம்!!...
முதல் முறையாய் மொத்தமாய்
முழு உலகை ஒன்றாய் ரசிக்கிறோம்!!!...
தேனின் சுவையைவிட
தென்மதுர தமிழின் சுவை
பெரிதென்று நினைத்திருந்தேன்!..
ஆனால் - இன்று சற்றே தடுமாறுகிறேன்...
உன் செவ்விதழின் சொல்லிலடங்கா சுவையா?
சந்தங்களின் சந்துகளில் வெளிப்படும்
என் தமிழ் சுவையா? - என்று!...
நேராக சென்று இரு கோடுகளாக திரும்பும் உன் தலை வகிடினை போல இரு புறம் பிரிந்து இருக்கும் என் வாழ்க்கை பாதையில் எந்த புறம் செல்ல என வழி காட்ட வா என் வாழ்வே!
மின்சாரம் இல்லா அறைக்கு உன் புன்னகையால் வெளிச்சம் தந்தது போல.... எண்ணங்களிலும் மனதிலும் எராளமான குழப்பங்களுடன் திசை தெரியாமல் பயணிக்கும் எனக்கு வழி காட்டியாக வாழ்க்கை துணையாக வருவாயா?
என்னை பற்றிய நினைவு உன்னில்
என்றாவது எழுகின்றதா என தெரியவில்லை
ஆனால்
உன்னை பற்றிய சிந்தைகளுடன்
உதயமாகின்ற என் பொழுது
உன்னை பற்றிய கனவுகளுடனே
முடிகின்றது என்பது உனக்கு தெரியுமா?