உணர்கிறேன்....

உன்னோடு பயணித்த போது உணராதது...
உன்னோடு வாழ்ந்த போது உணராதது ....
உன்னை பிரிந்த இந்த ஒரு வாரத்தில்
உயிர் போகும் என் வலியில் உணர்கிறேன்!... 

மரணிக்கும்....

உன்னோடு வாழும் வாய்ப்பு
இருக்குமா தெரியவில்லை - ஆனால்
உன்னோடு மரணிக்கும் வாய்ப்பு
இருக்கிறது என் காதலுக்கு!... 

என் காதல்...

உன்னோடு பேசுவது ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயுள் வாழ்ந்தது போன்ற நிம்மதி தந்தவளே
ஒரேயடியாக என்னை வஞ்சித்து என் காதலை
உன்னோடு எடுத்து சென்றவளே !... -பத்திரமாக  பார்த்துகொள்
உன்னோடு வரும் என் காதலை மட்டுமாவது !... 

விட்டு விடுகிறேன்

உன்னை விட்டு  விடுகிறேன் - அன்பே...
உன்னோடு என் காதலையும் - அது
உன் வாழ்கையில் தடுமாறும் போது
உன்னை பத்திரமாக வழி நடத்தும்....
 

சுயநலவாதி...

சுயநலவாதி என நீ கூறியபோது
சுடவில்லையடி என் மனது - உனக்காகவே
சுடர்விடும் என் வாழ்வு - உன்னையே
சுற்றி வருவதால் கண்ணே!... 

பாவம்...

நீ நலம் வாழ நித்தம் தவமிருந்தேன்
    காலம்  செலுத்திய வழியில் - நானே
நின் வாழ்வின் பெரும் பாவமாய்
    காட்சி பொருளாய் மாறிப்போனதேன்?

முதல் முத்தம்!...

அவசரத்தில் அள்ளி நான் அணைக்க
அச்சத்தில் நீ  தவிக்க!.. - உன்
முந்தானை என் தோளில் துண்டு ஆக
முத்தங்களால் நாம் எச்சமானோம்!!...
முதல் முறையாய்  மொத்தமாய்
முழு உலகை ஒன்றாய் ரசிக்கிறோம்!!!...  

அலங்காரம்!...


சின்ன சின்னதாய்
சிக்கனமாய் உன்னை
அலங்கரித்து கொள்கிறாய் - நீ!..
சின்னா பின்னமாய்
சிதறிப்போகிறேன் நான்!...  

உயிர்!...

ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்து
உயிர் பெற்று வந்தவளோ நீ!...

மெழுகு!...

உனக்காக நான் உருக 
எதற்க்காக - நீ
மெழுகாய் உருகுகிறாய்
என் தேவதையே!

சமர்ப்பணம்!...

என்னின் ஒவ்வொரு சாதனையையும்
எவருக்காவது சமர்ப்பணம் செய்ததுண்டு!..
என் சாதனைகளின் மொத்தமே
என்னின் வாழ்வை உனக்கு சமர்ப்பிக்கிறேன்!!..

என்னவளோ!...


எனக்காகவே பிறந்தவள் என்ற
என்னத்தை வரவைத்தாய் - நீ
முதன் முதலில் சேலைகட்டி -  என்
முன்னால் வந்த போது !.. 

உலக மாற்றம்!...

உன்னால் உலக மாற்றம்
என்னுள் ஏற்ப்பட்டது பற்றி
ஏதும் அறியாதவள் போல
எத்தனை காலம் நடிப்பாயடி?
என் ஆயுள் உள்ளவரையா
உன் ஆயுள் உள்ளவரையா ?
இரண்டும் ஒன்றென அறியும்வரையா?

பலி!....

போர் களத்தில்
முதல் பலி  நீ !...
 
உன் களத்தில்
முதல் பலி நான்!...

இதயமே!...

உன்னோடு வாழும்
வாழ்வினை இழந்தாலும்
உயிரோடு இருக்கும்
நாளெல்லாம் - உன்னின்
வாசனை என்னோடு
பயணித்து கொண்டே
இருக்கும் என் இதயமே!...

என் தோழா!..

உன்னோடு பயணித்த
ஒவ்வொரு பொழுதும்
உற்சாகம் ஊற்றாக
ஓடியதே என் நெஞ்சில்!....
ஒரு முறை கூடவா
உன்னால் அதை
கண்டு பிடிக்க இயலவில்லை
என் தோழா!...

சுவாசமே!

உன்னை பார்த்த போது
என்னில் ஏற்ப்பட்ட உணர்வு
உன்னில் வராது போனதில்
ஆச்சர்யமில்லை - தோழி!...

என்னோடு பழகிய பிறகும்
உன்னால் என்னை நேசிக்க
எந்நாளும் முடியாது எனும்போது 
என்னால் சுவாசிக்க கூட
முடியவில்லையடி  தோழி!..  
 
 

தடுமாற்றம்...

தேனின் சுவையைவிட
தென்மதுர தமிழின் சுவை
பெரிதென்று  நினைத்திருந்தேன்!..
ஆனால்  - இன்று சற்றே தடுமாறுகிறேன்...
உன் செவ்விதழின் சொல்லிலடங்கா சுவையா?
சந்தங்களின் சந்துகளில் வெளிப்படும்
என் தமிழ் சுவையா? -  என்று!... 
 

உன் பரிசம்

அறத்துப்பாலின் அற்புதமும்
வள்ளுவனின் காமத்துப்பாலின் காவியமும்
உணரத்துவங்கினேன் - அன்பே
உன் பரிசம் முதன் முதலாய் கிடைத்தபோது!... 

ஓவியங்கள்

ரவிவர்மனின் கண்களில் - நீ
காண  பட்ட பிறகு தான்
அவனது ஓவியங்கள்
உயிர் பெற்றதோ?
 

வாழ்வு!,,,

உன்னோடு வாழ்வதென்பது
இறைவனால் மறுக்கப்பட்டாலும்
உன்னோடு பயணிப்பதென்பது
இவன்  முடிவெடுத்தது!...

என் வாழ்வே

நேராக சென்று
இரு கோடுகளாக திரும்பும்
உன் தலை வகிடினை போல
இரு புறம் பிரிந்து இருக்கும்
என் வாழ்க்கை பாதையில்
எந்த புறம் செல்ல
என வழி காட்ட வா என் வாழ்வே!

குழப்பங்களும்!... தீர்வுகளும்!...

அம்மாவாசையும் பௌர்ணமியும் 
மாறி மாறி வருவது போல
உன்னை பற்றிய
குழப்பங்களும் தீர்வுகளும்

மாறி மாறி என்னை வாட்டுகிறது!

குழப்பங்கள்...

சூரியனை பார்த்ததும்
விலகி செல்லும்

புல்லின் பனித்துளி போல
உன்னை பார்த்த

பின்னால் எனது
குழப்பங்களும் விலகி 

செல்கிறது கண்ணம்மா!
 

வாழ்வு...

முடித்து முடித்து
அவிழ்த்து விடும் 
உன் கூந்தலை போல
என் வாழ்வு சிக்கலையும் 
அவிழ்த்து விட
வருவாயா வண்ண மயிலே!

தேவதையே!

செவ்விதழை சுற்றி 
வண்ணம் தீட்டியதை  போன்ற
இயற்கையான கருநிற
வெளிவட்டம் - உன்
முத்தரிசி பல்லடுக்குக்கு 
மேலும் அழகூட்டுகிறது தேவதையே!

வாழ்வு...

துடுப்பில்லாமல் காற்றின்
வேகத்துக்கு பயணிக்கும்
படகினில் செல்லும் பயணி போல...
பயணிக்கிறது என் வாழ்வும்....

சுகம்.....

நீண்ட நெடிய கடுமையான
பயணத்துக்கு பிறகு
கிடைத்த நிழலில்

இளைப்பாறும் போது 
கிடைக்கும் சுகம்.....
கிடைக்க பெற்றேன்
உன் திருமுகம் தனை
பார்த்த நொடியில்...

வழி காட்டி...

மின்சாரம் இல்லா அறைக்கு
உன் புன்னகையால் வெளிச்சம் தந்தது போல....
எண்ணங்களிலும் மனதிலும்
எராளமான குழப்பங்களுடன்
திசை தெரியாமல் பயணிக்கும்
எனக்கு வழி காட்டியாக
வாழ்க்கை துணையாக வருவாயா?

நினைவு....

என்னை பற்றிய நினைவு உன்னில்
என்றாவது எழுகின்றதா  என தெரியவில்லை
ஆனால்
உன்னை பற்றிய சிந்தைகளுடன்
உதயமாகின்ற என் பொழுது
உன்னை பற்றிய கனவுகளுடனே
முடிகின்றது என்பது உனக்கு தெரியுமா?