முதல் முத்தம்!...

அவசரத்தில் அள்ளி நான் அணைக்க
அச்சத்தில் நீ  தவிக்க!.. - உன்
முந்தானை என் தோளில் துண்டு ஆக
முத்தங்களால் நாம் எச்சமானோம்!!...
முதல் முறையாய்  மொத்தமாய்
முழு உலகை ஒன்றாய் ரசிக்கிறோம்!!!...  

அலங்காரம்!...


சின்ன சின்னதாய்
சிக்கனமாய் உன்னை
அலங்கரித்து கொள்கிறாய் - நீ!..
சின்னா பின்னமாய்
சிதறிப்போகிறேன் நான்!...  

உயிர்!...

ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்து
உயிர் பெற்று வந்தவளோ நீ!...

மெழுகு!...

உனக்காக நான் உருக 
எதற்க்காக - நீ
மெழுகாய் உருகுகிறாய்
என் தேவதையே!

சமர்ப்பணம்!...

என்னின் ஒவ்வொரு சாதனையையும்
எவருக்காவது சமர்ப்பணம் செய்ததுண்டு!..
என் சாதனைகளின் மொத்தமே
என்னின் வாழ்வை உனக்கு சமர்ப்பிக்கிறேன்!!..

என்னவளோ!...


எனக்காகவே பிறந்தவள் என்ற
என்னத்தை வரவைத்தாய் - நீ
முதன் முதலில் சேலைகட்டி -  என்
முன்னால் வந்த போது !.. 

உலக மாற்றம்!...

உன்னால் உலக மாற்றம்
என்னுள் ஏற்ப்பட்டது பற்றி
ஏதும் அறியாதவள் போல
எத்தனை காலம் நடிப்பாயடி?
என் ஆயுள் உள்ளவரையா
உன் ஆயுள் உள்ளவரையா ?
இரண்டும் ஒன்றென அறியும்வரையா?

பலி!....

போர் களத்தில்
முதல் பலி  நீ !...
 
உன் களத்தில்
முதல் பலி நான்!...

இதயமே!...

உன்னோடு வாழும்
வாழ்வினை இழந்தாலும்
உயிரோடு இருக்கும்
நாளெல்லாம் - உன்னின்
வாசனை என்னோடு
பயணித்து கொண்டே
இருக்கும் என் இதயமே!...

என் தோழா!..

உன்னோடு பயணித்த
ஒவ்வொரு பொழுதும்
உற்சாகம் ஊற்றாக
ஓடியதே என் நெஞ்சில்!....
ஒரு முறை கூடவா
உன்னால் அதை
கண்டு பிடிக்க இயலவில்லை
என் தோழா!...

சுவாசமே!

உன்னை பார்த்த போது
என்னில் ஏற்ப்பட்ட உணர்வு
உன்னில் வராது போனதில்
ஆச்சர்யமில்லை - தோழி!...

என்னோடு பழகிய பிறகும்
உன்னால் என்னை நேசிக்க
எந்நாளும் முடியாது எனும்போது 
என்னால் சுவாசிக்க கூட
முடியவில்லையடி  தோழி!..