பூண்டி அய்யா...


(26-11-09 அன்று எனது நண்பர் சரவணன் திருமணத்தை நடத்தி வைக்க ஒரத்தநாடு வந்த பூண்டி அய்யாவை வரவேற்று எழுதிய கவிதை)

ஏழை பணக்காரன்
ஏதும் உனக்கு தெரியாது
படிக்கணும் என வந்தால்
பல்லக்கில் வைக்க தயங்கியதில்லை நீ
காந்தியத்தை கற்று தர
கற்கும் மாணவனின் நலமறிய
கால்வலிக்க நம்மின்
கல்லூரியை சுற்றிவர தயங்கியதில்லை நீ
சில நேரம் தகப்பனாக,
பல நேரம் தாயாக,
எப்போதும் எங்கள் குருவாக
இப்போதும் வழிகாட்டியாக
என்றென்றும் நல்ல தோழனாக
எம்மை செழுமை படுத்தும்
எங்கள் அய்யாவே - இன்று
உங்கள் மாணவனின்
திருமணத்தை நடத்தி
வைக்க வருகைதரும்
உங்களை வரவேற்பதில்
உங்களால் வளம் காணும்
உங்கள் மாணவர்கள்
நாங்கள் பெருமையடைகிறோம்