உன்னருகில் நான்...

எந்நேரமும் புன்னைகையுடன்
எல்லோரையும் அரவணைத்து - நீ
இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை
இருக்க செய்பவளே!... - ஒரு
நாழிகை உன்னருகில்
நானிருந்தால்...
ஒரு யுகம் வாழ்ந்த
அர்த்தம் கிடைக்குதடி!...

மீண்டு(ம்) வருவான் தமிழீழ நாயகன்..

ஏழுமுறை எம்தலைவனை
ஏற்கனவே கொன்ற
எமகாதகர்களே!...
எம்மின அடையாளம்
எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது!...
விடுதலை போராட்டத்துக்கு
விடிவு ஒன்றே தீர்வு!...
தமிழர்களின் தாகத்திற்கு
தமிழீழம் மட்டுமே முடிவு!...
வீழ்ச்சி எமக்கு புதிதல்ல
வீழ்வதும் மீண்டு எழுவதும்
விடுதலை புலிகளின் இயல்பு!...
இழந்த எம் தாய் மண்ணை மீட்டெடுக்க
இறந்ததாய் நீவிர் சொல்லும்
தமிழீழ நாயகன்
மீண்டு(ம்) வருவான்!...

வாய்ப்பு...

குங்கும நிறத்தவளே
உன் பொற்பாதங்களில்
தவழும் முத்தழகு கொலுசாக
வாழ்வின் இறுதிவரை
வந்திடும் வாய்ப்புதனை
தந்திடுவாயா

கோபம்..

பாசமிருக்கும் இடத்தில தான்
கோபம் இருக்கும் - என
கேள்வி பட்டதுண்டு!.. - ஆனால்
உன் மீது நான் வைத்த பாசத்தால்
கோபம் என்னவென்பது கூட
மறந்தேன் என் அன்பே!...

வெல்வோம் தமிழீழம்...

ஒன்றாய் இரண்டாய்
ஒவ்வொருவரும் ஓரனியில்
எம்மின அடையாளமே!...
எங்களின்தலைவனே!...
உன் அடி பற்றி
உன் தலைமையில்
மாவீரர் தின சபதமேற்று
நம்மின தாகம் தீர்க்க
நம் மண்ணை மீட்டெடுக்க
மீண்டும் அணிதிரள்வோம்
பகைவர் படை அகற்றி
வஞ்சகர் முகம் கிழிக்க
தலைவனின் வழிகாட்டுதலில்
புலியாய் புறப்படுவோம்.....
தமிழீழம் வெல்வோம்....
தரணியில் தலை நிமிர்வோம்!...

உன்னால் மட்டும்..

என்
செல்ல சகியே....
சின்ன சிலையே....
எடையில்லா இடையே...
நாலு பேரால் நான்
சுமக்கப்படும் நாள் வரை
வற்றாத உன் அன்பால் - இந்த
வையகத்தில் வானுயரம்
தொட செய்!...

என் சுவாசம்...

காதல் காற்றை போல
அதனால் தான் நேசிக்கிறேன்...
நீ என் உயிராய் போனாய்
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....

நீ ...

முக்கனிகளின் மொத்த சுவை
எக்கணமும் என்னின் துணை