நின்னோடு வாழ்தலே வரமென்று வேண்டுதலோடு என் முருகனிடம் தாரமாய் உன்னை கேட்டு நித்தமும் தவமிருந்தேன் - என் வேதமும் நீயென களிப்புற்றிருந்தேன் தாமரையே!.. வழக்கம்போல விதி சதிசெய்ய உன்னை முழுமையாக புரிந்த நான் இறுதிவரை போராடியும் பயனற்று போனதேனம்மா?
அந்நிய தேசத்தில் ஒரு அரைநாள் உன்னோடு வாழ்தலே ஆயுளுக்கும் இன்பமென நினைத்திருந்தேன் !... ஆறு திங்கள் உன்னருகினில் வாழ ஆண்டவன் தந்த வாய்ப்பினில் அரை நாழிகை கூட நீ - என்னை அள்ளி அணைத்திட வாய்ப்பில்லாமல் ஆளுக்கொரு திசையில் பயனிப்பதேனடி?...
வார்த்தைகளில் விளையாடி- என் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த தெரிந்த எனக்கு - உன்னிடம் நேரில் பேச வார்த்தைகளின்றி தவிக்கும் போது - நான் வெயில் காலத்தில் தோன்றும் கானல் நீரை போலவே உன் வாழ்விலும் தோற்றமளித்தேனோ!....