செவ்விதழாளே!...

செவ்விதழாளே!...
அடிக்கடி
நீ கொள்ளும் கோபத்தை
அன்றும் என் மீது
காட்டினாய் நீ!..
உன் பொய் கோபத்தை
ரசித்தபடி,
என் விரல்களுடன்
விளையாட...
அலை போன்ற
வளைந்து நெளிந்து
செல்லும் உன்
கூந்தலுக்கு
குடுப்பினை இல்லையோ
என கூறியதும் -
என்னை தவிர
வேறு ஒரு கேசத்தை
தொட்டுவிடுமா
உன் விரல்கள்
என செல்லமாக
என்னை அடிக்க
வரும் என் தேவதையைய்
அப்படியே அள்ளி
அணைத்துக்கொள்கிறேன் நான்!

கோபம்....

அவசர அலுவல்
நேரங்களில்
என்னிடம்
சொல்ல மறந்து நீ
அலுவலகம் விட்டு
செல்லும் சில
நாட்களில்
என்னில் எழும்
கோபம் - உன்
திருமுகமதனை
பார்த்த நொடியில்....
காலை பொழுதினில்...
கடற்கரை மணல்வெளியில்....
காற்றோடு களைந்து...
கவிதை பாடும் - உன்
கூந்தலை போல
கலைந்து விடுகிறது!...

சிந்திக்க வைத்தவளே...

நான் சிகரம்
தொட்டுவிட்டதாக
பாராட்டுபவர்களுக்கு
தெரியுமா...
என்னை -
சிந்திக்க
வைத்தவளே
நீ தான்
என்று!....

நீ.....

பொம்மை வாங்க
கடைக்கு சென்றபோது
உனக்கு என்ன
வேணும் என
கேட்ட
என் அப்பாவிடன்
உன்னை நோக்கி
கை காட்ட
நாணத்தால் சிவந்து
பொம்மைகளுடன்
பொம்மையாக
மாறிப்போனாய் - நீ!...

உன் கொளுசுகளின் ஓசை....


என்னை பெரிய
இசை கலைஞன்
என்பவர்களுக்கு
தெரியுமா?
நான்
ஏழு ஸ்வரங்களும்
கற்றது
உனது
கொளுசுகளிடம் தான்
என்பது!...

நட்சத்திரமே...

உலகத்து நட்சத்திரங்களை
எல்லாம் உனக்குள்
வைத்துக்கொண்டாயோ?....
நீ
சிரிக்கும் போது
அத்தனை
நட்சத்திரங்களும்
ஒளி(உதி)ர்கின்றனவே!...