வாழ்வு..

வாழ்வின் வழிகாட்டியாக வந்து
வசந்தத்தை வரசெய்த பெற்றோருக்கு...
சாதிக்க ஊக்கம்தந்து வாழ்வில்
உயர வைத்த சகோதரர்களுக்கு....
தனிமையை ரசிக்க பழகிய என்னை 
தன்னை ரசிக்க வைத்த மனைவிக்கு....
துவண்டு வீழ்ந்த  பொழுதெல்லாம் 
தோள் தந்த   நண்பர்களுக்கு...
நேசம் தந்து என்னை 
நேசித்த சுற்றமும் உறவுகளும்...
என என் எண்ணங்களும் செயல்களும் 
என்றென்றும் உங்களையே சுற்றி வந்தாலும்
விதி வசத்தால் - என் தாய்மண் தந்த 
மதியை அந்நியனுக்கு அடகு வைக்கும் 
அடிமை வாழ்வுக்கு பழகி - உங்களிலிருந்து 
அந்நியப்பட்டு போகிறேன் ...