என் வாழ்வே

நேராக சென்று
இரு கோடுகளாக திரும்பும்
உன் தலை வகிடினை போல
இரு புறம் பிரிந்து இருக்கும்
என் வாழ்க்கை பாதையில்
எந்த புறம் செல்ல
என வழி காட்ட வா என் வாழ்வே!

குழப்பங்களும்!... தீர்வுகளும்!...

அம்மாவாசையும் பௌர்ணமியும் 
மாறி மாறி வருவது போல
உன்னை பற்றிய
குழப்பங்களும் தீர்வுகளும்

மாறி மாறி என்னை வாட்டுகிறது!

குழப்பங்கள்...

சூரியனை பார்த்ததும்
விலகி செல்லும்

புல்லின் பனித்துளி போல
உன்னை பார்த்த

பின்னால் எனது
குழப்பங்களும் விலகி 

செல்கிறது கண்ணம்மா!
 

வாழ்வு...

முடித்து முடித்து
அவிழ்த்து விடும் 
உன் கூந்தலை போல
என் வாழ்வு சிக்கலையும் 
அவிழ்த்து விட
வருவாயா வண்ண மயிலே!

தேவதையே!

செவ்விதழை சுற்றி 
வண்ணம் தீட்டியதை  போன்ற
இயற்கையான கருநிற
வெளிவட்டம் - உன்
முத்தரிசி பல்லடுக்குக்கு 
மேலும் அழகூட்டுகிறது தேவதையே!

வாழ்வு...

துடுப்பில்லாமல் காற்றின்
வேகத்துக்கு பயணிக்கும்
படகினில் செல்லும் பயணி போல...
பயணிக்கிறது என் வாழ்வும்....

சுகம்.....

நீண்ட நெடிய கடுமையான
பயணத்துக்கு பிறகு
கிடைத்த நிழலில்

இளைப்பாறும் போது 
கிடைக்கும் சுகம்.....
கிடைக்க பெற்றேன்
உன் திருமுகம் தனை
பார்த்த நொடியில்...

வழி காட்டி...

மின்சாரம் இல்லா அறைக்கு
உன் புன்னகையால் வெளிச்சம் தந்தது போல....
எண்ணங்களிலும் மனதிலும்
எராளமான குழப்பங்களுடன்
திசை தெரியாமல் பயணிக்கும்
எனக்கு வழி காட்டியாக
வாழ்க்கை துணையாக வருவாயா?