எனக்கானவள்....

என் வலைபக்கத்தின்
வசந்தங்களே!...
என் தோழர்களே!....
காதலை மட்டுமே
காதலித்து வந்த
என்னை
காதலியையும்
காதலிக்கும்
காதலனாக மாற்றிய
என் காதலியும்
வருங்கால மனைவியுமான
என் மோகனாவை
உங்களுக்கு
அறிமுகபடுத்துவதில்
ஆனந்தமடைகிறேன்!...

ஏமாற்றம்...

என் எண்ணங்களிலும்
சிந்தனைகளிலும் - நீ
இருந்ததினால் - என்
வாழ்வாய் வருவாய் என
எண்ணி இறுமாப்பு
கொண்டிருந்தேன்!...

என் எதிர்படும்
நேரங்களில் எல்லாம்
உன் உதட்டோர
புன்னகையால்
என்னுள் ஒரு
மாற்றத்தை ஏற்படுதி
என் வாழ்வின்
பரிணாமத்திற்கு வித்திட்டாய்
என் மார்தட்டி
மகிழ்ந்திருந்தேன்!...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
ஏதோ ஒரு பொழுதினில்
ஏழிரண்டு மாதங்களாய்
என்னில் வசந்தத்தை
வரசெய்தவளே!...
உன் வாசல் வந்து
என் காதல்தனை சொல்ல
எத்தனித்த வேளையில்
அருகினில் இருந்தவனை
அழைத்து - என் காதலன் என
அறிமுகபடுத்திய நொடியினில்
கல் பட்ட கண்ணாடி
போலானதடி - உன்னை
சுமந்திருக்கும் என இதயம்!.....

என்னவள்...


புதிதாய் தண்ணீர்
நிரம்பிய குளத்தினில்
தாமரை இதழ்களுடன்
மலர்ந்திருக்கும்
ஒற்றை அல்லி போல
என் மனதினில்
மோகனமாய் - நீ
மட்டும்!.....