திருமண அழைப்பிதல்..

வாழ்க்கை எனும் பூஞ்சோலையில்...
எங்களையும் மணமுள்ள மலராக்கும்
எங்கள் இதயத்திலிருக்கும் தோழமையே...
எதிர்வரும் 12-02-2010 வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி துளிகள் வரை ...
குதுகலமூட்டும் இந்த நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள்!

ஆம்! இந்த காலை பொழுதில் ஆரம்பமாகிறது
உங்கள் நட்புகள் -

நாங்கள் இருகரம் பற்றும் இல்லறத் தொடக்கவிழா !
இந்த நாளில் உங்களின் வருகைக்காகவும் வாழ்த்துதலுக்காகவும்
ஒரத்தநாடு LGVK திருமண மண்டபத்தில் - மணவறையில்
வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்

எங்களை வாழ்த்தும் முப்பத்து முக்கோடி தேவர்களில்
நீங்களும் ஒருவர் என எண்ணி அகமகிழ்கிறோம்!
நீங்கள் வரும் பாதையிலே
எங்கள் ஆவலும், நட்பும் மலர் தூவி அணிவகுத்து நிற்கும்
உங்கள் வருகை எங்களுக்கு வசந்தம் ஆகட்டும்
உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் எதிர்வரும் சாதனைகளுக்கு விருட்சமாகட்டும்
மேகமாய் வந்து மழையாய் வாழ்த்துங்கள் ....
அந்த அன்பு மழையில் எங்கள் வசந்தமும் வரலாறாகட்டும்

அவசரமில்லாமல் வாருங்கள் - ஆனால்
அவசியம் வாருங்கள் ....

நட்பின் வரவை வாசல் வந்து வரவேற்று
தோழமையின் வாழ்த்தை சேகரிப்பது
இளவழுதி & மோகனா