இப்பிறவி....

என் எண்ணங்களின்

விதையாக விளைந்தவளே!...

என் கற்பனைகளின்

உயிர் சிலையாக வளர்ந்தவளே!....

உன்னைப் படைத்ததால்

பிரம்மன் எனக்குள்

உன்னைப் பற்றிய

சிந்தனைகளை வைத்தானா?...

இல்லை என் உயிர்க்கனவிற்கு

உருவம் தர

உன்னைப் படைத்தானா?....

புரியவில்லை - ஆயினும்....

உன்னைப் பார்த்ததாலே

இப்பிறவியின் உண்மை உணர்ந்தேனடி !.....

--வீ.இளவழுதி

No comments: