தடுமாற்றம்...

தேனின் சுவையைவிட
தென்மதுர தமிழின் சுவை
பெரிதென்று  நினைத்திருந்தேன்!..
ஆனால்  - இன்று சற்றே தடுமாறுகிறேன்...
உன் செவ்விதழின் சொல்லிலடங்கா சுவையா?
சந்தங்களின் சந்துகளில் வெளிப்படும்
என் தமிழ் சுவையா? -  என்று!... 
 

உன் பரிசம்

அறத்துப்பாலின் அற்புதமும்
வள்ளுவனின் காமத்துப்பாலின் காவியமும்
உணரத்துவங்கினேன் - அன்பே
உன் பரிசம் முதன் முதலாய் கிடைத்தபோது!... 

ஓவியங்கள்

ரவிவர்மனின் கண்களில் - நீ
காண  பட்ட பிறகு தான்
அவனது ஓவியங்கள்
உயிர் பெற்றதோ?