பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
உன் புன்னகை
உன்னின் புன்னகையை பார்க்கும்
ஒவ்வொரு நொடியிலும் -
நமக்கான தோட்டத்தில்
புதிதாய் பூத்துக்குலுங்கும்
ரோஜா பூக்களை பார்க்கும்
பரவசம் கிடைக்குதடி!...
என் காதலியே!..
என் காதலியே!...
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
மூச்சு காற்றாய் என்
இதயத்தின் அடிவருடுகிறாய்
உன்னை சந்திக்கும் நாழிகைகளில்
வெப்பகாற்றை மட்டும் என் மீது
உமிழ்கிறாயே!.. ஏனடி என் கண்ணே?....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)