சேரா உறவு..

ஒருமுறை உந்தன் குரலொலி ஒலித்திருந்தால்
ஓயாத அலையாய் உன் வாழ்வில் கலந்து
ஒன்றாகியிருபோம் ....


முன்னரே என் கண்ணில் விழுந்திருந்தால்
மூவுலகுக்கும் என் முதலாய் நீ
முன்னிருந்திருப்பாய்...


கண்ணிலிருந்து வரும் காந்த சக்தி
காண கிடைத்திருந்தால் நமக்கான வாழ்வு
கானல்நீராகியிருக்காதோ....


அழகான சிரிப்பில் அடிமனசை வருடுபவளே
அன்றே என் முன்னால் வராமல் - என்றும் என்னை
அனாதையாக்கியதேன்...