என் எண்ணங்களின்
விதையாக விளைந்தவளே!...
என் கற்பனைகளின்
உயிர் சிலையாக வளர்ந்தவளே!....
உன்னைப் படைத்ததால்
பிரம்மன் எனக்குள்
உன்னைப் பற்றிய
சிந்தனைகளை வைத்தானா?...
இல்லை என் உயிர்க்கனவிற்கு
உருவம் தர
உன்னைப் படைத்தானா?....
புரியவில்லை - ஆயினும்....
உன்னைப் பார்த்ததாலே
இப்பிறவியின் உண்மை உணர்ந்தேனடி !.....
--வீ.இளவழுதி