இப்பிறவி....

என் எண்ணங்களின்

விதையாக விளைந்தவளே!...

என் கற்பனைகளின்

உயிர் சிலையாக வளர்ந்தவளே!....

உன்னைப் படைத்ததால்

பிரம்மன் எனக்குள்

உன்னைப் பற்றிய

சிந்தனைகளை வைத்தானா?...

இல்லை என் உயிர்க்கனவிற்கு

உருவம் தர

உன்னைப் படைத்தானா?....

புரியவில்லை - ஆயினும்....

உன்னைப் பார்த்ததாலே

இப்பிறவியின் உண்மை உணர்ந்தேனடி !.....

--வீ.இளவழுதி

உயிர்த்தெழுகிறேன்....

வான் அலைகளில்
மட்டுமே உன் சிரிப்பொலி
உணர்ந்தவன்....
முதல்முறை நேரில்
பார்த்தபோது....
மொட்டுகளில் இருந்து
மெல்ல.... மெல்ல....
விரியும் மலர்களின்
இதழ்களை போல - உன்
இதழ்களின் வழி - நீ
சிந்திய மெல்லிய புன்னகையில்
மெல்ல... மெல்ல....
உயிர்த்தெழுகிறேன்
என்னில் நான் மீண்டுமொரு முறை.....
--வீ. இளவழுதி, பின்னையூர்.