வாழ்வோடு நீ

உன்னை பார்க்க பார்க்க
உள்மனதில் ஒரு குதுகலம்  
உன்னோடு பேச பேச
உயிரினில் ஒரு பரவசம்
உன்னோடு வாழ்தலை நினைக்கையில்
உயிரோடு ஒரு சொர்க்கம்!..

ஏனடி சென்றாய்...

அர்ச்சுனனின் வில்லை 
அச்சுபுத்தகத்தில் பார்த்தவனிடம்  
உன் இதழ்களில் பார்க்கவைத்து
ஏதும் அறியாதவனாக
ஏதோவென்று வாழ்ந்தவனை
எல்லாராலும் அறியபட்டவனாக்கி
என் வாழ்வினில்  வந்து
ஏதும் அறியாதவள்  போல
ஏனடி சென்றாய்? 

அழகின் ஊற்றே...

ஊட்டி மலர்தோட்டத்தில்
உள்ள பூக்களெல்லாம்
உன் முகம் பார்த்த நொடியில்
தன் தலை தாழ்த்தி கொள்கிறது

நாணல் செடி கூட நாணத்தால்
நன்னிலம் நோக்கி தலைசாய்க்கிறது
உன் நாணத்தின் நளினம் கண்டும் 
உன் கொடியிடை அழகில் மயங்கியும்

இயற்கையே உன்னை பார்த்து
இறக்கையில் ஒண்ணுமே இல்லாத
இந்த இளைஞன் எம்மாத்திரம்....  

தரிசனம்...

ஆயிரமாயிரம் கவிதைகள்
அடுத்தடுத்து வருகின்றது
அமைதியான உன் கண்களை 
அருகினில் தரிசிக்கும் போது....

கேள்வி?...

ஆயிரமாயிரம் மைல்களுக்கு
அப்பால்  இருந்தபோது
உன்னில் நான்கண்ட
உள்ளமுருகிய காதல்
உன்னருகினில்
வாழ்ந்திடும்போது
வாய்க்காதது ஏனோ?