பத்தோடு பதினொன்றல்ல - நான்
தனித்துவமானவன்
என்பதால் தானோ - உன்
புன்னகையை - எனக்கு
பொன்னகையாக்கி
புத்தொளி பெறச்செய்தாய்!...
பின் ஏனடி என்னை
பிரிந்து சென்று உள்ளுயிர்
பறித்து சென்றாய்!...
பத்தோடு பதினொன்றல்ல - நான்
தனித்துவமானவன்
என்பதால் தானோ - உன்
புன்னகையை - எனக்கு
பொன்னகையாக்கி
புத்தொளி பெறச்செய்தாய்!...
பின் ஏனடி என்னை
பிரிந்து சென்று உள்ளுயிர்
பறித்து சென்றாய்!...
தமிழ் போல என்னுள்
தங்கிய என் வேதமே !.... நிவேதமே!...
தன்னை பற்றி மட்டுமே
தனிப்படுத்தி காட்ட முயலும் - உலகில்
தாயைப்போல மற்றவர்களும்
தழைத்து வாழ வேண்டுமென
தவமிருப்பவளே!....
சோகங்கள் இங்கு பல உண்டு - ஆறுதல்
சொல்ல இயலாதவையும் சில உண்டு
இன்று - நானும்
உனக்கு ஆறுதல் சொல்ல
இயலாதவனாகவே உள்ளேன்!...
ஆயிரமாயிரம் பேர்
வார்த்தைகளில் ஜாலம் கோர்த்து
உன்னிடம் கொட்டி விட்டு சென்றாலும்
உன்னின் உண்மையான நேசம் மட்டும் - நீ
தோள் சாய்ந்து இளைப்பாற - உன்னை
அரவணைத்து தூக்கி விடும் -
அந்த தோழமையில் - நீ
அனைத்தையும் மறக்க வேண்டும்
புதிதாய் பிறந்ததாய் - எண்ணி;
சாதனைகள் நீ படைத்திட வேண்டும்
சரித்திரம் உன்னை பார்த்திட வேண்டும்
வார்த்தைகளை கோர்த்து உனக்கு
ஆறுதல் சொல்வதை விட
என் தோள் சாய்த்து அரவணைத்து
அழைத்து செல்லும் நட்பாக
இருக்க விரும்புவதால் சொல்கிறேன்
கவலை - நீ மறந்து ;
கணினியில் கரை கண்டிட
காலம் உன்னை போற்றிட
புதிய அத்தியாயம் - நீ படைத்திட
ஆறுதல் சொல்ல வந்த
வழிப்போக்கன் வாழ்த்துகிறேன்!...
- வீ. இளவழுதி
உன் மீது நான் கொண்ட காதல்
உணர்வுகளால் மட்டுமே!
காலம் நம் கனவுகளை
கலைத்தாலும் - என்
காதல் மட்டும்
கலையாது கண்மணி !...
எனக்காக எதையும் செய்வேன்
என்றவளே... என்னவளே !...
எதிர்வரும் காலங்களில்
என் எதிர்படும் நேரங்களில்
என் இதயம் மீண்டும் துடித்திட
என் உயிர் வாங்கிய
உன் உதட்டோர புன்னகையை தா!...
அது போதும் - எனக்கு
இன்னும் ஒரு ஜென்மம் வாழ்ந்திட !....