எல்லாமும் நீயாய்....

என் தாயிடம் கண்ட

பாசமும் அரவனைப்பும்

என் தந்தையிடம் கண்ட

வழிகாட்டுதலும் கண்டிப்பும்

என் சகோதரனிடம் கண்ட

அன்பும் அக்கறையும்

என் நண்பர்களிடம் கண்ட

ஒற்றுமையும் உதவிகளும்

உன் ஒருத்தியால்

எனக்கு தர இயலுகிறதே

என்பதை என்னும் போது

என்னின் எல்லாமுமாக

நீயே தோன்றுகிறாய்!....

என் மோகனமே!....

உன்னால்.......

உன்னின் எழுத்துக்களை

பார்க்கும் பொழுதுகளில்

என்னில் எழும் உற்சாகம் …..

உன்னின் குரல்

கேட்கும் நொடிகளில்

என்னில் பரவும் சந்தோசம் …..

உன்னின் சின்ன சின்ன

செல்ல சீண்டல்களில்

என்னில் ஏற்படும் பரவசம்….

நாலெட்டு வருடங்களாய்

தவமிருந்து நறுமுகையே

உன்னை கண்டெடுத்ததன்

அர்த்தம் விளங்குதடி……

கைபிடித்து வருவாயா

கடந்து சென்ற பெண்களில்
கண் கொண்டு பாராமல்
காரணம் யாதுமில்லாமல்
காற்றினில் மிதக்க விட்டாய் – என் மனதினை.....
காலமெல்லாம் இந்த சந்தோசம்
கிடைக்க கண்மணியே - என்
கைபிடித்து வருவாயா
காற்றில் என் இறுதி
மூச்சு இருக்கும் மட்டும் …….

என் கவிதைகளின் நாயகி

வெற்று பக்கங்களாய்
இருந்த என்
வாழ்வு புத்தகத்தின்
மொத்த பக்கங்களையும் – தன்
அன்பாலும் பாசத்தாலும்
காதலாலும் வாசமுள்ள
வசந்தமான வாசிக்க
இயன்ற புத்தகமாக
மாற்றி அமைத்தவள் இனி வரும் என்

கவிதைகளின் கர்ப்பக விருச்சம்!...