நினைவலை...

தண்ணீரில் எவ்வளவு
அழுத்தினாலும் மேல்வரும்
தக்கையை போல...
என்னதான் உன்னை
மறக்க முயற்சித்தாலும்
நினைவலைகளில் நீந்தி
மனதுக்குள் வந்து விடுகிறாய்

நம்பிக்கை வார்த்தை....

என் எண்ணங்களில் நிரம்பி
என்னாலும் சாதிக்க முடியுமென்று
எனக்கு நம்பிக்கை தந்து
என்னை சேராமலே சென்றவளே...

உன்னை சந்திக்காத ஒவ்வொரு கணமும்
உன்னை அடையாத வாழ்வின் நொடிகளும்
உனது நம்பிக்கை தந்த வார்த்தைகளால்
உருண்டோடி செல்கிறதென தெரியுமா கண்ணே!...

காதலுக்கு நன்றி.....

வற்புறுத்தி வருவதில்லை காதல்.
கட்டாயபடுத்தி வாழ்வதில்லை வாழ்கை.
அது -
ஒரு புரிந்துணர்தல்.
ஒரு அழகான கவிதை.
நேசிக்க சுவாசிக்க நம்பிக்கையளிக்கும்,
நம்மை வாழ்வின் வேறு ஒரு
பரினாமத்தை கானச்செய்யும்
உருவமில்லா குழந்தை.
சொல்லி புரிய வைப்பதில்லை,
உணர்ந்து தெரிந்து கொள்ளுதல்.

நன்றி கண்ணம்மா!...

உன்னால் நான் உணர்ந்த
அந்த விவரிக்க இயலாத உணர்வுகள்……
என்னை எரித்தாலும் மிஞ்சும்
என் சாம்பலிலும் எஞ்சி இருக்கும்.
எனக்கான….,
என் கவிதைக்கான….
களமாக நீ இருந்ததற்கு….,
மறந்து போன என் எழுத்துக்களை
எனக்கு மீட்டு தந்ததற்கு...
வாழ்வின் வெளிச்சம் குடுத்ததற்கு....
வாழ வேண்டும் என்ற வேகம் தந்தற்கு.....
நன்றிகள் பல..  பல!...

சிங்கை நாடே!...

என் தாய் மொழியை
தமிழ் மொழியை - உன்
ஆட்சி மொழியாய் கொண்ட
சிங்கை நாடே!...
பணியாற்ற வந்த இடத்தில்
பாசமிக்க நண்பர்களை தந்து
பலவித மொழி பேசும்
பல்லாயிரம் பேர்களை
சந்திக்க வைத்து - என்னை
சிந்திக்க வைத்து!...
சிறந்ததொரு வாழ்வுக்கு
அடித்தளமிட்டு!... அடியவன்
எளியவன் என்னையும்
அரவணைத்த எங்கள்
அன்பின் முகவரியே!...
எங்கள் தமிழர்களை
எப்போதும் உன்
மகுடத்தில் வைத்துள்ளாய்..
எங்கள் சிகரத்தில்
என்றென்றும் உனக்கு
மணிமகுடம் உண்டு!...

உணர்வு!...



செந்தூர தமிழில் - உன்
தேன் குரல் கேட்கும்
வாய்ப்பு கிடைக்க பெற்றது போது
ஏற்பட்ட உணர்வு தான்....
வில்லை உடைத்து சீதையை
கைபிடித்த போது இராமனுக்கும்
ஏற்பட்டிருக்குமோ ?