கனவுகளின் தேவதையே!...

நாழிரண்டு வருடங்களாய் - நீ
நடத்திய கனவு கண்ணாம்பூச்சியில்
நீண்ட உன் கரிய கூந்தலுடன்
கண்மையிட்ட காந்த கண்களுடன்
ஆப்பிள் பழ கன்னத்துடன்
முத்தரிசி பல்வரிசையுடன்
செர்ரிபழ உதடுகளால்
உன் சின்ன சிரிப்பில்
என் செல்ல மனசை
கொள்ளை கொண்டவளே!...
நேரில்!..
என்னருகில் நீயிருந்த
இந்த இருநாட்களும்
இரண்டு ஆயுள் வாழ்ந்த
இன்பம் இருக்குதடி!...