பருவம்...

கைகெட்டா நிலவை காட்டி
உணவருந்த வைத்தது
குழந்தை பருவம்
கைக்கெட்டும் உன்னை காட்டி
சாதிக்க வைத்தது - என்
இளமை பருவம் !..

என் கவிதைகள்....

துணை இல்லா சிட்டு குருவி போல
விடை தெரியா ஏக்கத்துடன்
என் கவிதைகள்!...

என் மனது

எதை தேடி
இந்த அலைகள்
ஒவ்வொரு முறையும்
கரைக்கு வருகிறதோ
அதே போல
விடை அறியாமல்
உன்னை தேடியே
வருகிறது - என் மனது

வாழும் வரம்

ஊருக்கு வெளியில்
ஒருவரும் இல்லா தேசத்தில்
உன் மடியில் தலை வைத்து
இந்த உலகை ரசிக்காமல் போவேனா
இல்லை - செல்லமே ...
உன்னோடு வாழும் வரம்
வாழ்வெல்லாம் கிடைக்குமா?

காதல்..

நீ என்னருகில் இல்லா நேரங்களில்
நினைவுகளில் நீந்தி மெல்ல கொள்கிறாய்
நேரில் பார்க்கும் போது - ஏனோ
நெஞ்சில் இருப்பதை சொல்ல மறுக்கிறாய்
கனவுகளில் தினம் கண்ணாமூச்சி
காட்டுகிறாய் - என் காதலை சொன்னால்
காதுகளை மூடி கொள்கிறாய் -
என் காதலியே!...
நம் காதலை கரை சேர்ப்பாயா?