உன் மீது நான் கொண்ட காதல்
உணர்வுகளால் மட்டுமே!
காலம் நம் கனவுகளை
கலைத்தாலும் - என்
காதல் மட்டும்
கலையாது கண்மணி !...
எனக்காக எதையும் செய்வேன்
என்றவளே... என்னவளே !...
எதிர்வரும் காலங்களில்
என் எதிர்படும் நேரங்களில்
என் இதயம் மீண்டும் துடித்திட
என் உயிர் வாங்கிய
உன் உதட்டோர புன்னகையை தா!...
அது போதும் - எனக்கு
இன்னும் ஒரு ஜென்மம் வாழ்ந்திட !....
No comments:
Post a Comment