உன் உதட்டோர புன்னகை...

உன் மீது நான் கொண்ட காதல்

உணர்வுகளால் மட்டுமே!

காலம் நம் கனவுகளை

கலைத்தாலும் - என்

காதல் மட்டும்

கலையாது கண்மணி !...

எனக்காக எதையும் செய்வேன்

என்றவளே... என்னவளே !...

எதிர்வரும் காலங்களில்

என் எதிர்படும் நேரங்களில்

என் இதயம் மீண்டும் துடித்திட

என் உயிர் வாங்கிய

உன் உதட்டோர புன்னகையை தா!...

அது போதும் - எனக்கு

இன்னும் ஒரு ஜென்மம் வாழ்ந்திட !....

No comments: