பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
மூச்சுக்காற்று
தேகந்தனை மோகத்தில் மூழ்கிட
காதோரம் உரசும் உன்
மூச்சுக்காற்றே போதுமடி
விடியல்கள்
விரைவாக வந்து
நிறைவாக தா
நீயில்லா
நீண்ட இரவுகளால்
விடியல்கள்
குறைவாகி போனது
அருகாமை
எந்த கற்பனையும்
தேவையில்லை நீ
மட்டும் அருகிலிரு
கவிதைகள் அருவியாகும்
படைப்பு
அவசரத்தில் அள்ளி நான்
அணைக்க அச்சத்தில் நீ தவிக்க!..
சாம வேளையில
சமயலறையில
முத்தங்களால் எச்சமானோமே!!..
விடிந்த சூரியனும்
உறங்க மறுத்த
இரவுமாக நாம
இன்னமொரு உலக
படைக்கும் பிரமனானோமே!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)