சின்ன ஆசை....

உன்னை என் மடி மீது சுமத்தி -
உன் மன கஷ்டங்களுக்கு மருந்திட்டு
மீண்டும் நீ மண்ணில் மகிழ்வுடன்
பவனி வரும் நொடி -
நான் கானவேண்டும்......

ஆறுதல் தேடும் உன்னருகில்
ஆல மரம் போலிருந்து
அனுதினமும் உன் வளர்ச்சிக்கு
ஊன்றுகோலாக -
நான் இருந்திட வேண்டும்.....

உலகத்து இன்பங்கள் அனைத்தும்
உன் ஒருத்திக்கே என தேடி பிடித்து
உன் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்
அந்த நொடியில் உன் முகத்தில் எழும்
சின்ன..... சின்ன.... சந்தோசத்தை
நான் கான வேண்டும்....

என்னருகில் நீ இருந்தால்
எல்லையற்ற சந்தோசம்
என உணரும்படி - உன்னை
நான் காத்திட வேண்டும் ....

இறுதியில்....
என் மனம் முழுதும்
இன்பங்கள் நிரம்பி - உன்
மடியில் தலை வைத்து
என் உயிர் பிரிய வேண்டும் .....
-- வீ.இளவழுதி

No comments: