வரம் தருவாயா அண்ணா...

உணர்வுகளால் உன்னை நெருங்கி
உயிராய் உன்னை ஒரு முறை
பார்க்க ஆசை
உடன் பிறந்தவனே வருவாயா ....
வரம் தருவாயா ....

அண்ணா...

சோகங்களே உன்
நிகழ்கால வாழ்வானாலும்
சாதனைகளே உன்
கற்பனையில் ஊறி
வாழ்வை வென்றாய்;
சாவை மட்டும் ஏன்
சாகடிக்க மறந்தாய்?
என் அண்ணா....