என்னவளே...

அமைதியின் மறு உருவாய்
அலைபாயும் உன் கண்கள் ...
தனிமையுடன் தாலாட்டு பாடும்
உனது குணம் ...
மெலிதான சோகம் இழையோடும்
உன் முகம் ...
அதிர்ந்து விழாமல் வந்துவிழும்
ஒரு சில வார்த்தைகள்...
எளிமையின் வெளிப்பாடான
உனது அலங்காரம் ...
இப்படியாக என்னை
மொத்தமாக ஈர்தவளே...
என்னுடன் உன் வாழ்வை
பரிமாறிக்கொள்ளும் நாள்
என்று அமையும் கண்மணி ...
---வீ.இளவழுதி காளிங்கராயர்

1 comment:

Ganapathi DCW said...

Very soon it will made by GOD.
OK vik