உலகம்...

புருவம் உயர்த்தி உன்
புன்னகை சிந்தி பார்த்த
அந்த ஒரு பார்வையால்
உணர்ந்தேனடி - நீயின்றி
இல்லையென் உலகமென!!!

மனம்...

செல்லும் திசையெங்கும் நீ
செல்லும் முன்னரே  உன்
மனமறிந்து என் மனம்
பாதை அமைத்து
வைத்திருப்பது அறிவாயா
என் அன்பே!!

நடனம்....

மயிலின் நடனம் கூட
மலிவாய் போனது -உன்
மையலிட்ட அன்னநடையின் முன்..

ஈர்ப்பு....

புவி ஈர்ப்பு விசையின்
புரிதல் உணரக்கண்டேன் - உன்
மையிட்ட  கண்களின்
காந்த சக்தி கண்டபிறகு... 

உள்மனது

பாராமுகமாய் - நீ
என் முன் சென்றாலும்...
பலாப்பழம் போல
உன் மனம்..
பாவியிவனை எந்நாளும்
மற்றவர்களிடம்
பாராட்டிக்கொண்டே
இருப்பதை அறிவேனடி!!!

தமிழர் வாழ்வு...

எனது 250 வது படைப்பு....

மீதமுள்ள வாழ்வு
தேனாய் இனிக்க
மீத்தேனை எதிர்ப்போம்!...

தமிழர் வாழ்வு
தலைநிமிர வைகோவின்
தலைமை ஏற்ப்போம்!!   

நாசி!!!

பிதாகரஸ்  தேற்றத்தை
ஞாபகப்படுத்துகிறது
கூர்மையான  உன் நாசி 

மலர்ச்சி....

கலையான உன் 
கருப்பு முகத்தில் 
ஏழைகளின் வாழ்வில் 
ஏற்படும் மலர்ச்சியை போல 
சிவந்த உன் செவ்விதழ்கள்!!!

நாணம்....

பௌர்ணமி நிலவும்
சற்றே தயங்குகிறது - நீ
வெளிவரும் நாளில்
தானும் தலை காட்ட...

சிந்தனை...

அலட்சியப் படுத்துவதால் தானோ
அன்பே உன்னையே எக்கணமும்
சிந்திக்க  வைக்கிறது!!! 

செல்ல முனகல்...

பைந்தமிழும் தேனமுதும்
சற்றே பின்வாங்குகிறது
உன் சின்ன இடை
பற்றிய நொடியில் நின்
செல்ல முனகலில்...

அமைதி

கடல் அலை போல
எந்நேரமும்
ஓடி வருகிறேன்
கடலில் இட்ட
கல்லாக எப்போதும்
அமைதியாய்
இருப்பதேனோ

மனது...

மகரந்த தூளை 
நோக்கியே செல்லும்
வண்டு போல 
உன்னை நோக்கியே 
செல்கிறது - எனது  மனது 

விழிகள்...

 விரிந்த தாமரையை 
 ஞாபகப்படுத்துகிறது 
அகண்ட  உன் விழிகள் 

இதம்...

தென்றல் கூட
இதமாயில்லை - உன்
செவ்விதழ் வருடிய பிறகு !!! 

குளிர்..

உறைய வைக்கும் 
குளிரைப்பற்றி பயமில்லை 
உடன் நீயிருப்பதால்!...  
 

சுகமே!

காத்திருப்பதும்
கணக்கிடுவதும்
காலத்துக்கும் சுகமே!!
உனக்காக மட்டும்
எனும்போது!!!!     

பார்வை....

நெருப்பின்றி பற்றுகிறதே...
ஓ..! - நீ
நெருங்கி பார்ப்பதாலா....  

அந்நிய தேசமும் ... அவளும்...

உறைய வைக்கும் குளிரில்
உன் மண்ணில் கால் பதித்தேன்
உயிரில் கலந்தவள் நேசித்த பூமி என
உன்னில் கலந்திட்டேன் நொடி பொழுதில்...

நாட்கள் மெல்ல நகர்ந்தன
நரகமாய் என் பொழுதுகள் சென்றன
நரம்புக்குள் ஊடுருவிய குளிரில்
நகர மறுத்தன கால்கள்..

என்னோடு கலந்தவள்
தன் உறவுகளுக்காக  
என்னை தூக்கிஎறிந்தது போல
உன்னை என்னால் உதறிவிட
இயலாமல் பரிதவித்து நிற்கின்றேன்...

வசந்த காலம் என் வாழ்வினில்
வராமல் போகலாம் - ஆனால்
வந்தே தீரும் உன் மண்ணில்...
வாசலில் நின்று காத்திருக்கிறேன்
வருகைக்காக... 

கேள்வி

மனதின் வலி மற்றவர்களுக்கு
தெரியாமல் வாழ்வதே
வாழ்வாய் மாறி போனதேன்?...

நினைவுகள்....

நீ வேண்டாமென ஒதுங்கி வாழ்ந்தாலும்...
நெடுந்தூரம் ஓடி தொலைதூரத்தில் இருந்தாலும்....
ஆயிளுக்கும் உன் முகம் காணமுடியா சாபமிருந்தாலும்....
அடிமனசில் இன்னும் சிம்மாசனமிட்டு என்னை
அவஸ்தை பட வைப்பதேனோ கண்மணி?....

சேரா உறவு..

ஒருமுறை உந்தன் குரலொலி ஒலித்திருந்தால்
ஓயாத அலையாய் உன் வாழ்வில் கலந்து
ஒன்றாகியிருபோம் ....


முன்னரே என் கண்ணில் விழுந்திருந்தால்
மூவுலகுக்கும் என் முதலாய் நீ
முன்னிருந்திருப்பாய்...


கண்ணிலிருந்து வரும் காந்த சக்தி
காண கிடைத்திருந்தால் நமக்கான வாழ்வு
கானல்நீராகியிருக்காதோ....


அழகான சிரிப்பில் அடிமனசை வருடுபவளே
அன்றே என் முன்னால் வராமல் - என்றும் என்னை
அனாதையாக்கியதேன்...



அலைபேசி உரையாடல்....

குறிஞ்சி மலர் மலரும் போது
குதித்து கும்மாளமிட  துடிக்கும் மனது...
பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை பூப்பதால் ...
பரவசப்பட்டு பனிப்புயலில் குதிக்கும் அணிலாய் - என்
மனம் கூதுகளிக்கிறது - உன்னோடு மீண்டும்
மனம்விட்டு பேசியது - பன்னிரண்டு  ஆண்டுகள்  கடந்து....

எம். ராமசந்திரன் (MR)


மாசில்லா மாணிக்கம்
பெற்றெடுத்த எங்கள்
ஈடில்லா ராமனே!...
எம் மண்ணின் மைந்தனே!...
பின்னையின் முதல்வனே!...
வாழிய நீவிர் பல்லாண்டு!..

எம்மார் (எ) எம். ராமசந்திரன் Ex. MLA

பதவிக்கு வந்து பத்துநாளில் பகட்டாக
பவனி வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்...
கால் நூற்றாண்டு அரசியலில் - இன்றும்
கறைபடியா கரங்களுடன் வலம் வருகிறாய்!...
இருமுறை சட்டமன்ற உறுப்பினராய் இருந்தும்
இன்றும் எங்களுக்காக புல்லட்டில் பயணிக்கிறா...ய்!....
கட்சி பேதங்களை கடந்து தொகுதியின்
கடைசி நிலை மனிதன் வரை
சாதி மதம் பார்க்காமல் - உன்னில்
சரிபாதியாய் எண்ணி...
சடங்கு சம்பிரதாயங்களை ...
துக்க சந்தோசங்களை ...
உமதாக நினைத்து முதல்வனாய் - நீ முன்னின்று
உரிமையுடன் இன்றும் செய்து வருகின்றாய்!.....
அரசியலை எமக்கு கற்றுத்தந்த - எங்கள்
ஆசானே!... உன் அரிசுவடி பற்றி என்றும்
உங்கள் வழியில் பயணிப்போம்!...

திருமண நாள் 12-02-2014

எனக்கான எல்லா கஷ்டங்களையும்
உனக்கானது என ஏற்று கொண்டு
என் ஆயுளாக வந்தவளே!..
என் தாயாக மாறியவளே!...
உன்னோடு சேர்ந்து வாழ்ந்ததை  விட
இந்த  ஐடி அடிமை வாழ்வினால்
பிரிந்து வாழ்ந்த நாள்களே அதிகம்!...
இதோ வழக்கம் போல - இன்று நம்
திருமண நாளிலும் பிரிந்தே வாழ்கின்றோம்
என் வாழ்வில் மறுமலர்ச்சியை தந்தவளே!...
என் தலைவனை போல பம்பரமாய்
என்றும் நமது குடும்பத்துக்காக உழைப்பவளே!... 
இனியும் நமக்கு   இந்த இன்னல்  வாழ்வு
இருக்காது அன்பே!.. இதோ....
இன்னல் மறைந்து நமக்கான வாழ்வில் 
இளஞ்சூரியனாய் புது உதயம் பிறக்கிறது...
இந்த மணநாள் முதல்....
என் வாழ்வின் மகாராணியே...
எனது வாழ்வில் நீ வந்த  இந்த நாளுக்கும்
என் வாழ்வாய் அமைந்த உனக்கும்
எனது நன்றிகள்.... 

கவனிப்பு...

உன்னை பிரிந்து வாழும் நிர்ப்பந்தம்
உலகில் எனக்கு வாய்க்க பெற்றாலும்
உன்னிப்பாக என்னை கவனிக்கிறாய் - நம்
உறவை வளர்த்த என் கவிதைகளால்.....  

இதயத்தில் நான்!...

இருவார இடைவெளியில்
இருவரி என்னிடம் பேசினாய்
இறுமாப்பு கொண்டேன்
இந்த உலகில் -  ஆம்
இன்னும் என்னவளின்
இதயத்தில் நான்!...