என் பிறந்த நாள்

மனதுக்கு பிடித்தவர்களுடன்
மனதுக்கு பிடித்தமாதிரி
மற்றவர்களின் வாழ்த்துகளோடு
மகிழ்ச்சியாய் சென்றன - என்
கடந்து போன பிறந்த நாள்கள்

மனதுக்கு பிடித்த
மனைவியுடன் - என்
முதல் பிறந்த நாள்
மூச்சின் அடிநாதம் வரை
அந்த நாளுக்காக தவமிருக்க
ஆரம்பித்தேன்!...

ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆவலை அதிகரிக்க - நவீன
அடிமை வாழ்க்கை வாழும்
அடியேனை அந்நிய தேசம்
அனுப்பியது விதி

உலகை அறிமுகபடுத்திய பெற்றோர் இல்லை
உடன் பிறந்தோரும் சுற்றமும் இல்லை
நல்லதொரு வாழ்வை பகிர்ந்து கொண்டிருக்கும் மனைவி இல்லை
நல்வழி படுத்திய நண்பர்கள் இல்லை


யாருமற்ற ஒரு தனி
யாத்ரிகனாய் முழு நாளும்
அலுவலகத்தில் தனிமையில்

அமைதியாய் கழிந்தது
என் பிறந்த நாள்

நான் வணங்கும் என் முருகனே
நாலு பேரு இல்லாமல்
நான் மட்டும் கொண்டாடும்
பிறந்த நாள் இனி வேண்டவே வேண்டாம்

மறக்கத்தான் நினைக்கிறேன்...

மாற்றத்தான் நினைக்கிறேன்
லட்டு போன்ற எண்ணங்கொண்ட
தினவெடுத்த தோள்களை உடையவளை!.....
மறக்கத்தான் நினைக்கிறேன்
லகானை நோக்கி செல்லும் குதிரையை போல
தினம் உன்னை நோக்கியே வரும் என் எண்ணங்களை!...
மாறத்தான் நினைக்கிறேன்
லத்தி சுழலும் இடத்தை
திரும்ப பார்க்கும் போதெல்லாம்!.....
மாறத்தான் நினைக்கிறேன்
லாவகமான வார்த்தைகளால்
திரும்பிய பக்கமெல்லாம்...
நேசத்தை நேசித்தவளை - தன்
சுவாசத்தை நேசிக்க மறந்தவளை
நான் யோசிக்காமலிருக்க!.. ஆயினும்
திரும்பிய திசையெங்கும் உன்னை ஞாபகபடுத்தும் செயல்களும்
லட்சோப லட்சம் மக்களை பாக்கும் போது துளிர்விடும் ஆசையையும்
மறக்க இயலவில்லையடி!..

காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?

மானமுள்ள தமிழா! உன்னை ஆளுவது ஒரு தமிழனா? நம் இனத்தை வேரறுத்தவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பா?
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
மத்திய அரசாங்கமா இல்லை எம் மானம் வித்து பிழைக்க விரும்பும் பிணந்தின்னி கூட்டமா?
உலக நாடுகளே, ஒரு இனத்தை அழித்த கொடுமைக்கு எந்த தண்டனையும் இல்லையா?
நாளை உங்கள் நாட்டுக்கு இது போல நடந்தாலும் இப்படிதான் அமைதியாக இருக்க போகின்றீர்களா
நமக்கு கொஞ்சமும் மானம் இல்லையா?
பதவிக்கும் பணத்துக்கும் இன்று நம் இன மானத்தை அடகு வைத்து நம்மை கவனிக்காதவர்கள் நாளை நம்மையும் கொன்று அல்லது விற்று விட எவ்வளவு நேரம் ஆகும்?
போராடினால் சிறைகளில் அடைப்பதால் எம் முன்னோர் தந்த வீரம் மழுங்காது,
மானங்கெட்ட எங்களை ஆளும் நபர்களுக்கு பின்னர் மனித நேயமுள்ள ஒருவன் வருவான் மானத்தோடும் அதே வீரத்தோடும் அன்று நீதி வெல்லும் எம் இனம் மீண்டும் தலை நிமிரும்.

தேவை மீண்டும் சுதந்திரம்

(நான் பணி புரியும் நிறுவனத்தில் வரும் சுதந்திர தினத்துக்காக நடக்க இருக்கும் "தேசப்பற்று" எனும் தலைப்பிலான கவிதை போட்டிக்கு அனுப்ப பட்ட என் கவிதை)
பகத்சிங்கும் பாரதியும்
நேதாஜியும் நேரும்
படேலும் திலகரும்
காந்தியும் கட்டபொம்மனும் - என
எங்கள் சுதந்திர காற்றுக்கு வித்திட்ட
எண்ணற்ற தலைவர்களே!..
எம் வாழ்வுக்ககாக
உம் வாழ்வை
அர்ப்பணித்து - ஆர்ப்பரித்து
அன்னியரை நம் மண்ணிலிருந்து
அகற்றிட நீங்கள் பட்ட
அல்லல்களை ஆழ்மனதில் சுமந்து - நீவிர்
கனவு கண்ட அமைதி - துணை
கண்டமாய் இந்தியாவை
காக்கின்றோம் - எம் கண்ணிமைபோல!..
ராணுவ வலிமை
அறிவியல் வலிமை
விஞ்ஞான வலிமை
உலக வெப்பமயமாதல் தடுப்பு - என
எங்களின் கனவு 2020 இல் இருந்தாலும்
இந்த அறுபத்து நான்காவது
சுதந்திர நாளில் - சிறு
ஏக்கத்தோடு உம்மை நினைக்கின்றோம்!...
ஆம்!..
புதிய பொருளாதாரக்கொள்கையால்
நம் நாட்டு சிறு வணிகம் பாதிக்கப்படுவதும்
தன் தாயக தண்ணீரில் அண்டை நாட்டினரால்
சுட்டு கொள்ளப்படும் இந்தியனையும்
தன் மண்ணுக்குள்ளேயே நக்சல்கள் என கூறி
சுடுகாடாக்கப்படும் இந்திய மண்ணையும் காத்திட
உம்மை போன்ற தலைவர்கள் இல்லையே
என்ற கவலையோடு!...
அந்நியனிடம் அடிமைப்பட்ட
காலம் கடந்து - நம்
நாட்டு புல்லுருவிகளிடமிருந்தும்
அந்நிய சக்திகளிடமிருந்தும் - நம்
பாரத தேசத்தை காத்திட
மீண்டும் பிறந்திட மாட்டீரா?

நினைவுகள்...

புத்தகத்தில் மயிலறகு வைத்தால்
குட்டி போடும் என - என்
சிறு வயதில் கேள்விபட்டேன்
அது உண்மையா என தெரியவில்லை
ஆனால் - உன்
நினைவுகளை என்
மனதினில் வைத்தேன் அது
பல்கி பல குட்டி போட்டு
இன்று என் மனமெல்லாம்
உன் நினைவுகள்
மட்டுமே நிரம்பியுள்ளது

தேவதைக்கான கனவு...

முகம் கொண்டு பாராமல் என்
மூச்சு காற்றின் கடிவாளத்தை
மூன்றாண்டுகள் கையில் வைத்திருந்தவளின்
முகம் காணும் ஒரு ஏக்கம்

என் உலகத்தை தலைகீழாய்
புரட்டி போட்டு
புது வடிவத்தில்
அதே உலகத்தை
கானசெய்தவளை
காணவேண்டுமென்ற துடிப்பு

என்னின் எண்ணங்களை
என்னையறியாமலே
எடுத்து சென்றவளின்
எண்ணங்களுடன்
என்னை இணைத்துகொள்ளும்
ஒரு முயற்சி

இவையனைத்தும் நனவானது
இவனின் தேவதைக்கான
நேற்றைய கனவில்...


உன் புன்னகை


உன்னின் புன்னகையை பார்க்கும்
ஒவ்வொரு நொடியிலும் -
நமக்கான தோட்டத்தில்
புதிதாய் பூத்துக்குலுங்கும்
ரோஜா பூக்களை பார்க்கும்
பரவசம் கிடைக்குதடி!...

என் காதலியே!..

என் காதலியே!...
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
மூச்சு காற்றாய் என்
இதயத்தின் அடிவருடுகிறாய்
உன்னை சந்திக்கும் நாழிகைகளில்
வெப்பகாற்றை மட்டும் என் மீது
உமிழ்கிறாயே!.. ஏனடி என் கண்ணே?....

என் தோழியே!...

என் தோழியே!...
என் நட்புக்கு அடித்தளமிட்டவளே...
என்னையும் சாதிக்க தூண்டியவளே!...
என் எழுத்துக்களின் விருச்சமாய் அமைந்தவளே!...
என்னையே எனக்கு புதிதாய் தந்தவளே! ...
என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
தந்த அலுவலகத்தில் - நீ
என்னை கடந்து சென்ற சந்தர்ப்பத்தில்
என்னையே எனக்கு மீட்டு தந்த - உன்
ஒத்தை சிரிப்பு கூட கிடைக்காத தருணத்தில்
என் ஒத்தை இதயத்தை
ஓராயிரம் பேர் சம்மட்டியால்
ஓங்கி அடித்தது போல
ஒரு வலி தந்ததேனடி?.........

உயிரானவளே...

கதிரவன் முகம் காட்டும்
காலை பொழுதில்... கண்ணே!...
காற்றினில் அலைபாயும் - உன்
கார்மேக கூந்தலுடன்...
ஒத்தை உதட்டு சுழியில் - என்
ஆண்மையை அசைத்து விடும்
ஆழப்பார்வையால் என்
உயிர் வாங்கியதேனடி?...

அறியா காரணம்

மாலை வெயிலின்
மங்கிய வெளிச்சத்தில்
மஞ்சள் நிறத்தவளே! - உன்
கொஞ்சும் புன்னகையில்!.. - என்னை
கொள்ளை கொண்டவளே!...
அர்ச்சுனனின் வில்லை ஞாபகப்படுத்தும்
உதட்டினை உடையவளே!...
உன் மனதை போன்ற
வெள்ளை முத்தரிசி பற்கள்!..
அடர்ந்த புருவங்கள்
அந்த காந்த கண்கள்
பீன்ஸ் விரல்கள்
அறைநிலவாய் நகங்கள்
அமைதியான அர்த்தமான
ஆர்ப்பட்டமில்லா அன்பு வார்த்தைகளை
வெளிப்படுத்தும் குணம்
இன்னும் இன்னும்
உன்னிடம் நான்
கட்டுண்டதற்க்கான
காரணம்.. ஏராளம்
ஆனால்
காரணம் ஒன்று சொல்லடி
என் கண்ணே
என் காதலை உதறியதற்க்கு!

உன்னோடு...

ஒரு நாள் ஒரு பொழுது
உன் பாசத்தை நீ கொடுத்தால்
உன் அருகாமையை எனக்கு உணர்த்தினால்
உன் அன்பினை அள்ளி தந்தால்
உன் கையால் உணவருந்தினால்
உன் கண்களில் உலகினை கண்டால்
உன்னுடன் வீதிகளில் உலா வந்தால்
உன்னுடன் நம் உறவுகளை சந்தித்தால்
உனக்காக நான் துடிக்க அனுமதித்தால்
உனக்காக என்னையே அர்ப்பணிக்கவிட்டால்
அந்த நாள் அந்த பொழுது
இந்த உலகில் நான் உச்சம் அடைவேனடி!....


நாள் எதுவோ?

எல்லாருக்கும் பிடித்தமானவளே!...
எனக்கு மட்டும் பிரியமானவளே!...
மையிட்ட உன் காந்த கண்களா - என்
மாலையினை தாங்கபோகும் உன் தோள்களா
மையல் கொள்ளும் உன் அன்னநடையா
மனதை மயக்கும் உன் மந்திர பேச்சா
கொடியிடை குயிலே!.. என்னை
கொள்ளை கொண்ட மயிலே!...
உலகத்து அழகினை எல்லாம் - நான்
உன்னிடமிருந்து ரசிக்கப்போகும் நாள் எதுவோ?


என் காதலியே!..

என் காதலியே!.. - உனக்காக
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும்
காவியம் படைத்திடுவேன் - உன்
கண் அசைவு கிடைத்து விட்டால்
காலத்தையும் மாற்றி அமைப்பேன்

பிரியமானவளே!...

பிரியமானவளே!...
பிரியாவிடை தரும் முன்
பிரியமுடன் நீ பார்த்த
பார்வையின் பொருள் என்னவோ?

அம்மா...

எனது 100 வது படைப்பு இது...


அய்யிரண்டு மாதம் என்னை
ஆசையோடு வயிற்றில் சுமந்தாய்...
அய்யாறு வருடம் என்னை
அன்போடு நெஞ்சில் சுமக்கிறாய்...
நவீன வசதிகள் இல்லாத கிராமத்தில்
நாகரிகமாய் எம்மை வளர்த்தாய்....
படுக்கை வசதிக்காக - உன் துணிகளையே
படுக்கையாய் எமக்கு மாற்றி தந்தாய்....
படிப்பறிவில்லாத நீ உன் பிள்ளைகளை
பட்டபடிப்புக்கு அனுப்பி தீருவேன் - என
சபதமேற்றாய்.... சத்தியம் செய்தாய்....
சற்றும் ஓய்வின்றி உன்
ஆயுளை எமக்காய் அர்ப்பணித்தாய் - உன்
ஆசைகளை எங்களுக்காய் புறந்தள்ளினாய் ....
என்ன தவம் யாம் செய்தோம்
எம் அன்னையாய் உன்னை பெற!..
என்ன செய்து எம் கடன் அடைப்போம்
உன் ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர!....


திருமண அழைப்பிதல்..

வாழ்க்கை எனும் பூஞ்சோலையில்...
எங்களையும் மணமுள்ள மலராக்கும்
எங்கள் இதயத்திலிருக்கும் தோழமையே...
எதிர்வரும் 12-02-2010 வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி துளிகள் வரை ...
குதுகலமூட்டும் இந்த நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள்!

ஆம்! இந்த காலை பொழுதில் ஆரம்பமாகிறது
உங்கள் நட்புகள் -

நாங்கள் இருகரம் பற்றும் இல்லறத் தொடக்கவிழா !
இந்த நாளில் உங்களின் வருகைக்காகவும் வாழ்த்துதலுக்காகவும்
ஒரத்தநாடு LGVK திருமண மண்டபத்தில் - மணவறையில்
வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்

எங்களை வாழ்த்தும் முப்பத்து முக்கோடி தேவர்களில்
நீங்களும் ஒருவர் என எண்ணி அகமகிழ்கிறோம்!
நீங்கள் வரும் பாதையிலே
எங்கள் ஆவலும், நட்பும் மலர் தூவி அணிவகுத்து நிற்கும்
உங்கள் வருகை எங்களுக்கு வசந்தம் ஆகட்டும்
உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் எதிர்வரும் சாதனைகளுக்கு விருட்சமாகட்டும்
மேகமாய் வந்து மழையாய் வாழ்த்துங்கள் ....
அந்த அன்பு மழையில் எங்கள் வசந்தமும் வரலாறாகட்டும்

அவசரமில்லாமல் வாருங்கள் - ஆனால்
அவசியம் வாருங்கள் ....

நட்பின் வரவை வாசல் வந்து வரவேற்று
தோழமையின் வாழ்த்தை சேகரிப்பது
இளவழுதி & மோகனா


பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழர்களின் திருநாளில்
உழவர்களின் மகிழ்ச்சி நாளில்
உழவர்களின் உயிரான
கால்நடைகளை (மாடு) வழிபடும்
காவிய நாளில் - உங்களின்
வாழ்வில் மகிழ்வும்
உங்களின் குடும்பத்தில் நிறைவும் பெருக
உங்கள் நண்பனின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
இளவழுதி வீரராசன்

காற்றாய் நீ!...

காற்றை போலனவளா நீ - என்னால்
காற்றையும் பிடிக்க இயல வில்லை
உன்னையும் பிடிக்க இயல வில்லையே!..

கனவுகளில் நீ!...

உன்னோடு வாழும் வாழ்க்கை
கனவுகளில் மட்டும் தான் என்றால்
பகலே எனக்கு வேண்டாமடி...

இதயம் தொட்டவள்...

அதிராமல் வெளிப்படும் உன்
அன்பு வார்த்தைகளும்
கனிவான உன்
கருணை பார்வையும்
ஆப்பிள் கன்னமும்
அழகாய் அமைந்த
குடைமிளகாய் மூக்கும்
குண்டு கண்களும்
சின்ன உதடுகளில்
மெல்ல வழிந்தோடும்
உன் சிரிப்பும் - என்
சிந்தனைகளை சிதறடிக்கவில்லை!..
மாறாக
ஆயிரமாயிரம் கொளுசுகளில் - உன்
ஒத்தை கொளுசொலி - என்
உயிர் வாங்கி...
இதயத்தின்
அடி தொட்ட நாளில்...
அடியேன் உன்னிடம் - என்
ஆயுளை ஒப்படைத்தேனடி

கூந்தல்...

கருமேக கூட்டம் போன்ற
கடல் அலையை ஞாபகபடுத்தும் - உன்
கருநிற கூந்தலை காணும்போதெல்லாம்
களிப்புற்று இருந்தேன்!... ஏனோ
காளையிவனின் உள்ளமறியாமல்
காலத்தின் மேல் பழிசுமத்தி - என்
காதலை உதறி தள்ளியது போல - உன்
காற்றாட்டு கூந்தலை
கால் அளவுக்கு நறுக்கியதேனடி!..

காலத்தால் மாற்றமுடியாதது

உன்னோடு வாழ்தல்
இயலாத போதும்
உன்னோடு கனவுகளில்
களம் அமைத்து
உரையாடுவதும் உறவாடுவதும்
காலத்தால் மாற்றமுடியாததடி!...