முடிவுகள்...

இப்போதெல்லாம் அவன் தன்
இயல்பை மீறி முடிவெடுக்கிறான்....
திடிரென எடுக்கப்படும் முடிவுகள்
தீங்கிழைக்கும் என தெரியாமலேயே
எடுக்க படுகின்றன - இங்கு
எல்லோராலும் - அவன் மட்டும்
விதிவிலக்கல்லவே !...

நாழிரண்டு வருடமாய்
நகமும் சதையுமாய் இருந்தவன்
நாகரிகம் கருதி எடுத்த முடிவென
நாலுபேரிடம் சொல்லி பிரிந்தபோது
எத்தனை வலி தந்தது
என்பதை அறிவானா?

ஆறெட்டு மாதமாய் - அவனின்
ஆண்மையை அசைத்து பார்த்தவள்
அங்குலமங்குலமாய் அவனை ரசித்தவள்
அவளோடு வாழ்தலே சொர்க்கமென
அவனுக்கு உணர்த்தியவள்...
அவசரகதியில் எடுத்த முடிவு
ஆயுளுக்கும் வலிதந்ததை அறிவாளா?

எண்ணற்றவர்கள் இப்படி தான்
ஏதோ ஒரு காரணத்துக்காக
எதேச்சையாக எடுக்கும் முடிவுகள்
ஏதோ ஒரு எதிர்வினையை
ஏற்ப்படுத்தி சென்று விடுகின்றன
ஆனால்,
அது தரும் வலியும் வேதனையும் - நம்
ஆயுளின் உச்சமாய் இருப்பதை
அனுபவிக்க துவங்கும் நேரத்தில்
ஆளில்லா ஒரு தேசத்தில்
அன்னியப்பட்டு போனதை போல - உன்னையே
ஆச்சர்யமாய் நீ பார்க்க நேரிடும்
அப்போது நீ தோள் சாயகூட
ஆளில்லாமல் போக கூடும்!....