உலகம்...

புருவம் உயர்த்தி உன்
புன்னகை சிந்தி பார்த்த
அந்த ஒரு பார்வையால்
உணர்ந்தேனடி - நீயின்றி
இல்லையென் உலகமென!!!

மனம்...

செல்லும் திசையெங்கும் நீ
செல்லும் முன்னரே  உன்
மனமறிந்து என் மனம்
பாதை அமைத்து
வைத்திருப்பது அறிவாயா
என் அன்பே!!

நடனம்....

மயிலின் நடனம் கூட
மலிவாய் போனது -உன்
மையலிட்ட அன்னநடையின் முன்..

ஈர்ப்பு....

புவி ஈர்ப்பு விசையின்
புரிதல் உணரக்கண்டேன் - உன்
மையிட்ட  கண்களின்
காந்த சக்தி கண்டபிறகு... 

உள்மனது

பாராமுகமாய் - நீ
என் முன் சென்றாலும்...
பலாப்பழம் போல
உன் மனம்..
பாவியிவனை எந்நாளும்
மற்றவர்களிடம்
பாராட்டிக்கொண்டே
இருப்பதை அறிவேனடி!!!

தமிழர் வாழ்வு...

எனது 250 வது படைப்பு....

மீதமுள்ள வாழ்வு
தேனாய் இனிக்க
மீத்தேனை எதிர்ப்போம்!...

தமிழர் வாழ்வு
தலைநிமிர வைகோவின்
தலைமை ஏற்ப்போம்!!   

நாசி!!!

பிதாகரஸ்  தேற்றத்தை
ஞாபகப்படுத்துகிறது
கூர்மையான  உன் நாசி 

மலர்ச்சி....

கலையான உன் 
கருப்பு முகத்தில் 
ஏழைகளின் வாழ்வில் 
ஏற்படும் மலர்ச்சியை போல 
சிவந்த உன் செவ்விதழ்கள்!!!

நாணம்....

பௌர்ணமி நிலவும்
சற்றே தயங்குகிறது - நீ
வெளிவரும் நாளில்
தானும் தலை காட்ட...

சிந்தனை...

அலட்சியப் படுத்துவதால் தானோ
அன்பே உன்னையே எக்கணமும்
சிந்திக்க  வைக்கிறது!!! 

செல்ல முனகல்...

பைந்தமிழும் தேனமுதும்
சற்றே பின்வாங்குகிறது
உன் சின்ன இடை
பற்றிய நொடியில் நின்
செல்ல முனகலில்...

அமைதி

கடல் அலை போல
எந்நேரமும்
ஓடி வருகிறேன்
கடலில் இட்ட
கல்லாக எப்போதும்
அமைதியாய்
இருப்பதேனோ

மனது...

மகரந்த தூளை 
நோக்கியே செல்லும்
வண்டு போல 
உன்னை நோக்கியே 
செல்கிறது - எனது  மனது 

விழிகள்...

 விரிந்த தாமரையை 
 ஞாபகப்படுத்துகிறது 
அகண்ட  உன் விழிகள் 

இதம்...

தென்றல் கூட
இதமாயில்லை - உன்
செவ்விதழ் வருடிய பிறகு !!! 

குளிர்..

உறைய வைக்கும் 
குளிரைப்பற்றி பயமில்லை 
உடன் நீயிருப்பதால்!...  
 

சுகமே!

காத்திருப்பதும்
கணக்கிடுவதும்
காலத்துக்கும் சுகமே!!
உனக்காக மட்டும்
எனும்போது!!!!     

பார்வை....

நெருப்பின்றி பற்றுகிறதே...
ஓ..! - நீ
நெருங்கி பார்ப்பதாலா....