நாம்...

வெற்று பக்கங்களாய்
இருந்த - இவனின்
வாழ்க்கை புத்தகத்தை
வண்ணத்துபூச்சியாக வந்து
வசந்தத்தை வரசெய்து 
விதவிதமான பூக்களால்
வண்ணமயமான பக்கங்களாய்
மாற்றியவளே!..
உனக்கான வாழ்வில்
உயிராக நான்
உறவாடாதது ஏனோ?

நான்...

ஏதும் எழுதப்படாத
ஏடுகளாக இருக்கும்
என் டைரியை போல
எந்த சலனமும் இல்லாமல்
என்னவளின் வருகைக்காக நான்!...

என்னவள்

நீயில்லா வாழ்வு
நீரில்லா தாமரையாக....