பூஜை...

இறைவனின் பூஜைக்கு வந்த
அர்ச்சனை பூவே
காலையில் - நீ
கலையாய் - கவியாய்;
மாலையில் - நீ
தீயாய் - தீபமாய்;
சங்கீதம் ஒலிக்க
மத்தளம் இசைக்க
மோகனமாய் நாட்டியம்
அரங்கேற...
வேதமாய் - நிவேதமாய்
புதினமாய் - புவனமாய்
மங்கைகள் குலவையிட
ஆண்டாள் அருள்வேண்டி
லாவகமாக ஊர்கூடி இழுக்க
சத்தியமாய் சொல்கிறேன்
ரம்பையும் ஊர்வசியும் போல
அசைந்தாடி வருகிறது
ஐயாறு அடி
அய்யனாரு தேரு....

காதலே உன்னை ஆராதிக்கிறேன்....

அன்பே!.. அழகோவியமே!..
ஆராதிக்க வேண்டியவள் அல்லவா நீ!...
அழகு பதுமையே
ஆர்பரிக்கும் அழகுடையவளே
ஆண்டவன் உன்னை எனக்கு
ஆண்டு சில கடந்த பின்
அறிமுகப்படுத்தியதின் நோக்கம் என்னடி?
வளைந்த வில்போன்ற புருவமும்
கருணை நிறைந்த கண்களும்
செதுக்கிய அளவான மூக்கும்
ரவிவர்மனின் தூரிகையில்
வரையப்பட்ட தோற்றத்தை உடைய
உன் செவ்விதழ்களும்...
காதணிக்கு அழகு சேர்க்கும் காது மடல்களும்
பிஞ்சு வெண்டைக்காய் விரல்களும்
சங்கு கழுத்தும்..........
என எல்லா
எண்ணமுமாக இருந்தும் - நீ
என்னவளாக மாறாமல்
போனதேனடி?.....