உயிர்த்தெழுகிறேன்....

வான் அலைகளில்
மட்டுமே உன் சிரிப்பொலி
உணர்ந்தவன்....
முதல்முறை நேரில்
பார்த்தபோது....
மொட்டுகளில் இருந்து
மெல்ல.... மெல்ல....
விரியும் மலர்களின்
இதழ்களை போல - உன்
இதழ்களின் வழி - நீ
சிந்திய மெல்லிய புன்னகையில்
மெல்ல... மெல்ல....
உயிர்த்தெழுகிறேன்
என்னில் நான் மீண்டுமொரு முறை.....
--வீ. இளவழுதி, பின்னையூர்.

No comments: