பிரிகிறேன் சிங்கையே!...

எம் தாய்மொழிக்கு மட்டுமின்றி
எனக்கும் அங்கீகாரம் தந்த சிங்கையே!...
வாழ்வின் பல பரிணாமங்களை
வாழ கற்று தந்தாய்!...
எண்ணற்ற அனுபவங்களும் - வாழ்வில்
எதிர்நீச்சல் போடும் பக்குவமும்
எனக்கு பயிற்று வித்து...
என் எதிர்காலத்தை பிரகாசமாக்கினாய்!...
உன்னில் கற்ற பல நல்ல குணங்களோடு
உன்னை விட்டு தற்போது பிரிகிறேன்
எதிர் வரும் காலங்களில் - வாய்ப்பிருந்தால்
ஏற்றுக்கொள் என்னை மீண்டுமொரு முறை!...