இந்த ஒரு நொடிக்காக...

கண் மூடிபடுத்தால்
உறக்கம் வரவில்லை;
உறக்கம் வந்தாலும்
கனவு வருவதில்லை;
கனவு வரும்போதிலும் – அதில்
கண்மணி நீ வருவதில்லை – என
மன உளைச்சலில் மருகி;
அதிகாலையில் உறங்கி ;
தாமதமாய் எழுந்து;
அவசரகதியில் இயங்கி;
நெருசலில் சிக்கி;
வியர்வையில் நனைந்து;
மனம் வெறுத்து
அலுவலகம் நுழைகையில்
அருகினில் உன் தரிசனம்;
எல்லாம் மறந்து
ஒரு நிமிடம்
மனம் லேசாகிறது
புதிதாய் பிறந்ததாய்
என்னி மனம் கூதுகளிக்கிறது...
இந்த ஒரு நொடிக்காக...
இது போல ஓராயிரம்
இன்னல்களை கடந்து வரலாம்....
-- வீ. இளவழுதி

No comments: