அம்மா

என் ஒரு வார்த்தை கேட்டிட
எந்நாளும் காத்திருந்தாய்
எனக்கு புரியவைக்க
எள்ளளவும் அலுப்பின்றி
எளிமையாக கற்றுத்தந்தாய்
என் சின்ன சின்ன வெற்றிகளில் - நீ
எத்தனை மகிழ்வு கொண்டாய்
என்னை முழு மனிதனாக்க
எவ்வளவு பொறுமை கொண்டிருப்பாய்
எண்ணிலடங்கா உன் செயல்களை
எப்படி அறிவேன் நான்
என்று தானோ என் முருகன்
எனக்கொரு மகன் தந்தானோ
எங்கும் சொல்வேன் - நீயும்
எனக்கொரு மகள் தானம்மா
எக்கணமும் உன்னை போற்றிடுவேனம்மா

தேவதை

என்னை மீண்டு(ம்)
எழுத வைக்கும்
தேவதையோ நீ

என்கனா

கண்மணி உன்னோடு உலகம் சுற்றிட
பாசபறவைகளாக எங்கும் பறந்து திரிந்திடவே
அல்லல்படும் மனம் அலைந்திடுதே நித்தமும்
என்கனாவும் நிறைவேறும் நாள் வந்திடுமோ

மழலை

ஒவ்வொரு மாலைப்பொழுதும்
ஒருவித மகிழ்ச்சியைத்தருகிறது
உன் பொக்கைவயால் நீ தரும்
உன்னத ஒலிகளால்

குழந்தை

உன் சின்ன சின்ன
     சில்மிசங்களில்
உன் சின்ன சின்ன
      வார்த்தைகளில்
உன் சின்ன சின்ன
      கொஞ்சல்களில்
உன் சின்ன சின்ன
       நடனங்களில்
என்னை மகிழ்வித்து
       பெறுமைப்படுத்துகிறாய்

கவிஞர்

ஒன்றாகி எழுத
ஓராயிரம் இருக்க
ஒத்தை கவிதையில்
ஒதுங்கி விடாதே
ஓய்வெடுத்து வா
ஒரு சரித்திரம் படைத்திட

தேனீ

தேகமெல்லாம்
தேனூரும்
தேவதையோ - நீ
தேடித்தேடியலையும்
தேனீயோ - நான்