வரம்....

என் இறைவனின் சந்நிதானத்தில்
பூஜைக்கு வந்த அர்ச்சனை பூவே!...
நூறுமுறை உன்னை பிரிந்தாலும்
ஒருமுறை நம் மண்ணில் மறைந்தாலும்
மறுமுறை பிறக்கும் போது - உன்
அன்பும், நேசமும்; இதே காதலும்
வேண்டுமென்று -என்
இறைவன் முருகனிடம்
வரம் கேட்பேன்....

என்னவளின் தேடுதல்...

எனக்கே எனக்கானவளாக
என் சுவாசத்துக்குரியவளாக
என் இதயத்திலிருந்து
உயிர் கசியும் கவிதை
வரசெய்தவள் - இன்னும்
என் பார்வையின் தேடுதலில்......
புதிய புதிய
எழுத்துக்களை பொங்கும்
என் அழகு தமிழில் பிரசவிக்க....
அவள் என் எழுத்துகளின் தேடுதலில்.....

நான்...

இவன் காதலை மட்டுமே
காதலிக்க தெரிந்தவன்
காதலியை அல்ல!....
வீ. இளவழுதி

உன் வாழ்வில் நான்...

வழிப்போக்கனாய் உன்
வாழ்வினில் சென்றுவிடவா
இல்லை - உன்
மனக்காயங்களுக்கு மருந்திடும்
மனாளனாக வந்துவிடவா?