ரயில் பயணத்தில்

ஒரு தொலைதூர ரயில் பயணத்தில்....
சன்னலோர இருக்கையில் அமர்ந்து -
சலனமில்லா என் மனம் இயற்கையை
ரசித்து வருகையில்..... இடையில்
ஏதோ ஒரு சலனம் - என
சற்றே தலைதிருப்ப
தொட்டுவிடும் தூரத்தில் - என்
எதிரில் அமர்ந்திருந்தாய்...
என் வாழ்வே இயற்கையைபோல
இங்கிருக்க எதைதேடி
இத்தனை நாளாய் அலைந்தேன் - என

என்னுள் இறுமாப்பு கொண்டு
எனக்கு கிடைத்த வாய்ப்பில்
என் காதலை உன்னிடம் சொல்ல...
என்ன காரணத்தாலோ
உன் கண்ணிலிருந்த காதலை
கடைசி வரை என்னிடம் சொல்லாமலே
சென்றதேன் கண்மணி.....
--வீ.இளவழுதி