பின்னை இளவழுதி கவிதைகள்...
காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
உணர்கிறேன்....
உன்னோடு பயணித்த போது உணராதது...
உன்னோடு வாழ்ந்த போது உணராதது ....
உன்னை பிரிந்த இந்த ஒரு வாரத்தில்
உயிர் போகும் என் வலியில் உணர்கிறேன்!...
மரணிக்கும்....
உன்னோடு வாழும் வாய்ப்பு
இருக்குமா தெரியவில்லை - ஆனால்
உன்னோடு மரணிக்கும் வாய்ப்பு
இருக்கிறது என் காதலுக்கு!...
என் காதல்...
உன்னோடு பேசுவது ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயுள் வாழ்ந்தது போன்ற நிம்மதி தந்தவளே
ஒரேயடியாக என்னை வஞ்சித்து என் காதலை
உன்னோடு எடுத்து சென்றவளே !... -பத்திரமாக பார்த்துகொள்
உன்னோடு வரும் என் காதலை மட்டுமாவது !...
விட்டு விடுகிறேன்
உன்னை விட்டு விடுகிறேன் - அன்பே...
உன்னோடு என் காதலையும் - அது
உன் வாழ்கையில் தடுமாறும் போது
உன்னை பத்திரமாக வழி நடத்தும்....
சுயநலவாதி...
சுயநலவாதி என நீ கூறியபோது
சுடவில்லையடி என் மனது - உனக்காகவே
சுடர்விடும் என் வாழ்வு - உன்னையே
சுற்றி வருவதால் கண்ணே!...
பாவம்...
நீ நலம் வாழ நித்தம் தவமிருந்தேன்
காலம் செலுத்திய வழியில் - நானே
நின் வாழ்வின் பெரும் பாவமாய்
காட்சி பொருளாய் மாறிப்போனதேன்?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)