வீரவணக்கம் மாவீரர்களே!..

புறநானூரில் படித்ததை
புவியில் உள்ளோருக்கு
புரியும்படி போராடி காட்டி
புனித தலைவனின் போராட்டத்துக்கு
புத்துயிர் தந்த மாவீரர்களே!...

நீங்கள் விதைத்த வீரம்
நீங்காத கனலாக - எம்முடன்
நித்தம் கலந்திருக்கும்!...
நின் தியாகம் போற்றி
நீங்கள் விட்டு சென்ற
சுதந்திர தாகம் மீட்டெடுப்போம்!...

வீரத்தின் விளைநிலமே!...

உன் பெயர் சொன்னாலே
உலகம் சற்று உன்னிப்பாக
உற்று நோக்குமாறு செய்து
உன் இனத்தின் மதிப்பு
உயர செய்த - வீரமே!...
உன்னால் நாங்கள் பெருமையடந்தோம்!..
உன் அரசால் நாங்கள் ஒழுக்கமடைதோம்!..
உன்னால் நாங்கள் உயர்வடைந்தோம்!..
உன் அரசால் மீண்டு(ம்) வருவோம்!..
உலக அரங்கில் முதன்மை நாடாக!...
உன் 58 வது பிறந்த தினத்தில்
உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்!..

அதிகாரத்தை கைப்பற்றுவோம்!...

தமிழனுக்கு பிரச்சனை எனில்
தலையில் கட்டிய முண்டாசோடு
தரணி எங்கும் போரடுபவனே!...

முல்லைபெரியாறின் நம் உரிமை
முனைத்து நீ நின்றதாலே
முக்குதிக்கும் மக்களை சென்றடைந்தது!..

வாழ்வின் ஆதாரங்கள்
அழிக்கப்படும் ஸ்டேர்லைட்டின்
வழக்கு வாதத்துக்கு செல்லும்
வல்லமையுடைய வான்புகழ் தலைவா!...

மனிதாபிமானமே பெரிதென
மாற்று கட்சிகாரர்களையும்
மதிக்கும் மாசற்ற மாணிக்கமே!...

நாடாண்ட இனம் - இன்று
நாதியற்று கிடக்கிறது
நாளையை பற்றி கவலையின்றி
நாங்கள் வாழ உழைக்கும் உழைப்பாளி நீ!..

மக்கள் வாழ மாற்றமே தீர்வு
மறுமலர்ச்சி தோன்றிட - எங்கள்
மன்னவா நீயே கதி!..

சாஞ்சி போராட்டத்தில்
சரித்திரம் படைத்தவனே
சாகும் வரை உன்னை தொடர்வோம்!...

ஆணையிட்டு விட்டாய்
அண்ணன் உன் வழி நின்று
அதிகாரத்தை கைப்பற்றுவோம்!..
ஆளும் இனமாய் மாற்றி காட்டுவோம்!..

நேசம் கொண்டவளே!..

கண்டும் காணாமல்
கண்ணால் செய்தி சொன்ன
கல்லூரி காலங்களில்...
உன் தோழிகளிடம்
என் நண்பனென
அறிமுகப்படுத்திய நேரங்கள்...
வெளிப்படையாக சொல்லாமல்
என் காதல் கவிதைகளை
என்னைவிட அதிகமாய் நேசித்து
எல்லாரிடமும் அதன்
பொருளை விவரித்த
பொன்னான தருணங்கள்...
யாரும் அறியாமல்
உன்னோடு
கால் வலிக்க நடந்து
கடையில் வாங்கிய பொருட்களின்
ரசிதில் நம்மிருவரது பெயரையும்
ஒரு சேர பார்த்து
ரசித்த வினாடிகள்....
உன்னோடு அருந்தும் போது
மேலும் சுவைத்திட்ட
பழ ரசங்கள், உணவு வகைகள்...
நேரம் தெரியாமல்
சமூகம் பற்றியும்
காதல் பற்றியும்
உன்னோடு பேசிய
உன்னதமான மணித்துளிகள்....
உன்னோடு முதன் முதலாக
என் இருசக்கர வாகனத்தில்
பயணித்த போது காற்றினை விட
லேசாக உணர்ந்த நிமிடங்கள்..
இருவரும் சேர்ந்து
இரு கால்களையும்
ஒரு சேர வைத்து
ஒன்றாக சென்ற கோவில்கள்....
பிரியும் நேரம் வந்தும்
உன்னை விட்டு
வீடு செல்ல மனமின்றி
உன்னருகில் நின்று
அடம்பிடித்த நாழிகைகள்...
அவ்வப்போது நமக்குள் வந்த
அர்த்தமில்லாத ஊடல்கள்...
என அத்தனை
மறக்க இயலா சம்பவங்களையும்...
மற்றவர்களும் அறிந்து கொள்ள...
மற்றற்ற மகிழ்ச்சியான முடிவெடுத்திட
நீ நேசித்த கவிதையில்
தொகுப்பாக வெளியிடுகிறேன்...
நேசம் கொண்டவளே!.. புது
சுவாசம் தந்தவளே!....
படித்தவுடன் சொல்லி அனுப்பு
ஏதேனும் விடுபட்டிருந்தால் -
நம் வாழ்வை தவிர!...