யாதுமாகாமல் போனவளே!....


உன்னுடன் இணைந்து நடக்கும் போது...
உன்னுடன் இணைந்து உணவருந்தும் போது...
உன்னுடன் இணைந்து தேநீர் அருந்தும் போது...
உன்னுடன் இணைந்து கடைதெரு செல்லும் போது...
உன்னுடன் இணைந்து பணிபுரியும் போது...
உன்னுடன் இணைந்து பயணிக்கும் போது...
உன்னுடைய கால் கொலுசு சிணுங்கும் போது...
உனது சின்ன சின்ன சில்மிசங்களை காணும் போதும்...
வரம்பு மீறாத வாய் சண்டைகளும் ...
எல்லை மீறாத சீண்டல்களும் - நீ
எனது காதலியாக வில்லையே
என்ற ஏக்கத்தை விட - நீ
எனது மனைவியாக வில்லையே
என்ற வருத்தம் தான் மேலோங்கி நிற்கிறது !....
வீ. இளவழுதி

No comments: