உன்னோடு...

ஒரு நாள் ஒரு பொழுது
உன் பாசத்தை நீ கொடுத்தால்
உன் அருகாமையை எனக்கு உணர்த்தினால்
உன் அன்பினை அள்ளி தந்தால்
உன் கையால் உணவருந்தினால்
உன் கண்களில் உலகினை கண்டால்
உன்னுடன் வீதிகளில் உலா வந்தால்
உன்னுடன் நம் உறவுகளை சந்தித்தால்
உனக்காக நான் துடிக்க அனுமதித்தால்
உனக்காக என்னையே அர்ப்பணிக்கவிட்டால்
அந்த நாள் அந்த பொழுது
இந்த உலகில் நான் உச்சம் அடைவேனடி!....


No comments: