யாசிக்கிறேனடி....

உனக்கு பிடிக்காது என்பதால்
நான் இழந்தவைகளும்....
எனக்கு பிடிக்கும் என்பதால் - நீ
கற்றுகொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...
நமக்கான வாழ்வின் பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது....
எனக்கான உன் தவிப்பும்
உனக்கான என் அக்கறையும்
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...
உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்னும் வாழவைக்கிறது...
இப்படியான நம் காதலில்
நமக்கான குழந்தை
நம் காதலை அர்த்தமுள்ளதாக்கியது...
இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது என் உயிர் பிரியும்
வரம் வேண்டி நம் காதலிடம் யாசிக்கிறேன்.....
--- இளவழுதி வீரராசன்

2 comments:

Ganapathi DCW said...

Ilavaluthi,
Iyya unmai kathalukku ean savanum entru solkireerkal.
Why are ending lines shows sad news? May end with graceful.
By
M.Ganapathi
DCW LTD

Unknown said...

fine